என் மலர்

    சினிமா

    நடிகர் திலீப்பை சிக்க வைத்த ரகசிய செல்போன்: வெளிவராத பரபரப்பு தகவல்கள்
    X

    நடிகர் திலீப்பை சிக்க வைத்த ரகசிய செல்போன்: வெளிவராத பரபரப்பு தகவல்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகை பாவனா வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்பை சிக்க வைத்த ரகசிய செல்போன் குறித்து வெளிவராத பரபரப்பு தகவல்கள் வந்துள்ளன.
    நடிகை பாவனாவை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

    திலீப், இந்த வழக்கில் சிக்கியது மலையாள நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பாவனா கடத்தலில் உள்ள தொடர்பை போலீசார் கண்டுபிடித்தது, திகில் படங்களில் வரும் சம்பவத்தை மிஞ்சும் அளவுக்கு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இதற்காக அவர்கள் தனியாக திரைக்கதை எழுதி அதில் சில நபர்களை நடிக்க வைத்து கண்டுபிடித்த பரபரப்பு தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது. அதன் விவரம்:-



    பாவனா கடத்தல் வழக்கில் கைதான பல்சர் சுனில் முதலில் எந்த தகவலையும் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை. பணத்திற்காக மட்டுமே கடத்தியதாக தெரிவித்தார். ஆனால் அவரது பேச்சில் உண்மை இல்லை என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதற்காக பல்சர் சுனிலின் நண்பர் ஒருவரை இன்னொரு வழக்கில் கைது செய்த போலீசார் அவரை போலீசாரின் ரகசிய உளவாளியாக மாற்றினர். பின்னர் அந்த உளவாளியை பல்சர் சுனில் அடைக்கப்பட்ட அறையில் தங்க வைத்தனர்.

    அந்த உளவாளி பல்சர் சுனிலுடன் பேசி, பேசி அவரது நம்பிக்கையை பெற்றான். இதற்கே இரண்டு, மூன்று வாரங்கள் ஆகிவிட்டது. அதன் பிறகு மெதுவாக பாவனா, விவகாரம் பற்றி பேசினார். அப்போதுதான் இந்த வழக்கில் வெளிவராத பல உண்மைகளை பல்சர் சுனில் கொட்டினார்.



    அந்த தகவல்களை உளவாளி போலீசாரிடம் தெரிவித்தான். அதன் பேரில் திலீப் மற்றும் அவரது மானேஜர் அப்புண்ணி, தயாரிப்பாளர் நாதிர்ஷா மற்றும் திலீப்பின் 2-வது மனைவி காவ்யாமாதவன், அவரது தாயார் ஆகியோரின் செல்போன் தொடர்புகள் கண்காணிக்கப்பட்டன.

    மேலும் அவர்களின் வீடுகள், நிறுவனங்கள், கடைகளிலும் ரகசிய சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இதில் எதுவும் பெரிதாக சிக்கவில்லை.

    இதன் மூலம் திலீப் மற்றும் அவரை சார்ந்தவர்கள் மட்டும் யாருக்கும் தெரியாமல் தொடர்பில் இருப்பதை புரிந்து கொண்டனர். அந்த தொடர்பு எப்படி? நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டனர்.

    அப்போதுதான் ஜெயிலுக்குள் இருந்த பல்சர் சுனில் வெளியில் இருக்கும் முக்கிய நபரை தொடர்பு கொள்ள வழியில்லாமல் தவிப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அவர்கள் உளவாளி மூலம் பல்சர் சுனிலுக்கு ஒரு செல்போனை வழங்கினர். போன் கிடைத்ததும் அவன், ரகசியமாக சில எண்களை தொடர்பு கொண்டு பேசினார்.



    அந்த எண்கள் யாருடையது என்பதை போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்கரா உத்தரவின்பேரில் கண்டுபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அந்த செல்போன் நம்பர் நடிகர் திலீப் வைத்திருந்த ரகசிய செல்போன் எண் என தெரிய வந்தது.

    அந்த நம்பரை போலீசார் கண்காணிக்க தொடங்கினர். இதில்தான் திலீப் ஜெயிலில் இருந்த பல்சர் சுனிலிடம் பேசியது, காவ்யாமாதவனுடன் ரகசியமாக பேசியது ஆகியவை தெரிய வந்தது. அந்த பேச்சுக்களை டிரேஸ்அவுட் செய்த போலீசார் அதன் அடிப்படையிலேயே திலீப்பை ஆலுவா போலீஸ் கிளப்புக்கு வரவழைத்து 13 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையின் போதுதான் திலீப் பொறியில் அகப்பட்ட எலி போல மாட்டிக்கொண்டார். ரகசிய செல்போன் மூலம் பாவனாவுக்கு எதிராக அவர் செய்த சதி, கடத்தல் உள்ளிட்ட தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

    அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக தொகுத்த போலீசார் மொத்தம் 19 சாட்சியங்களை திரட்டினர். அவை அனைத்தையும் கோர்ட்டில் சமர்ப்பித்து திலீப்பை கைது செய்யும் உத்தரவை பெற்றனர்.



    இதற்கு வியூகம் வகுத்து கொடுத்த டி.ஜி.பி. லோக்நாத் பெக்கராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    அவரை கைது செய்த போலீசார் திலீப் மீது 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்திய தண்டனைச் சட்டம் 342 (சட்ட விரோத மாக அடைத்து வைத்தல்), 366 கடத்தல், 376டி கூட்டு மானபங்கம், 411 திருட்டு பொருட்களை வைத்திருத்தல், 506(1) குற்றம் செய்ய தூண்டுதல், 201 தடயங்களை அழித்தல், 212 குற்றவாளிக்கு ஆதரவாக இருத்தல், அவரை பாதுகாத்தல், 34 ஒரே திட்டத்துடன் சேர்ந்து குற்றம் செய்தல், 120(பி) சதி, 66(இ) சுய உரிமையை மீறுதல், 67(ஏ) ஆபாச படங்களை தயாரித்தல் ஆகிய 11 பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது.

    இந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் திலீப்புக்கு 20 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×