என் மலர்

    சினிமா

    பிக்பாஸ் நிகழ்சிக்கு தடை; கமலஹாசன் கைது - இந்து மக்கள் கட்சி புகார் மனு
    X

    பிக்பாஸ் நிகழ்சிக்கு தடை; கமலஹாசன் கைது - இந்து மக்கள் கட்சி புகார் மனு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிக்பாஸ் நிகழ்சிக்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் கமலஹாசனை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி புகார் மனு அளித்துள்ளது.
    பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தி வரும் புதுமையான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலஹாசன் மற்றும் அதில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ள 14 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

    இந்திய மக்கள் மானமே முக்கியம் எனும் கொள்கைகள் உடையவர்கள், இந்திய கலாச்சார பண்பாடுகளை கெடுக்கும் நோக்கில் தொடர்ந்து சினிமா, டிவி நிகழ்ச்சிகள் செயல்பட்டு வருகின்றன.



    இதன் உச்சகட்டமாக பிக்பாஸ் எனும் ஆபாச நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் எந்தவித தொடர்பு இல்லாத ஏழு ஆண்களும், ஏழு பெண்களும் கலந்து கொண்டு ஆபாசமாக பேசியும், 75% நிர்வாணமாகவும் நடித்து வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொலைக்காட்சியை பார்த்து வரும் சூழலில் இது போன்ற நிகழ்ச்சிகள் சமூக சீர்கேடுகளை அதிகரிக்க செய்யும்.

    தமிழர்கள் உயிரைவிட மேலாக மதித்து போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தை கூட கிண்டலடிக்கும் காட்சிகளும் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளது. இது ஏழு கோடி தமிழர்களின் மனதையும் புண்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனையும், அந்நிகழ்ச்சியில் நடிக்கும் நமிதா, ஓவியா, காயத்ரி ரகுராம், ஜூலி, ஆர்த்தி, ரைசா, கஞ்சாகருப்பு, வையாபுரி, சக்தி, ஆரூள், பரணி, சினேகன், கணேஷ் போன்ற 14 பேர்களையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து தமிழர்களின் கலாச்சாரம் பண்பாட்டை காப்பாற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×