என் மலர்

    சினிமா

    மலையாள நடிகர் சங்கத்தில் கிரிமினல்கள் ஊடுருவலால் அவமானம்: மம்முட்டி
    X

    மலையாள நடிகர் சங்கத்தில் கிரிமினல்கள் ஊடுருவலால் அவமானம்: மம்முட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மலையாள நடிகர் சங்கத்தில் கிரிமினல்கள் ஊடுருவலால் அவமானம் ஏற்பட்டுள்ளதாக மலையாளத்தின் முன்னணி நடிகர் மம்முட்டி கூறியிருக்கிறார்.
    நடிகை பாவனா காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இதைதொடர்ந்து மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் இருந்து திலீப் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார். நடிகர் சங்கத்தில் பொருளாளர் பொறுப்பில் திலீப் இருந்துவந்தார். அந்த பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடிகர் மம்முட்டி வீட்டில் நடந்தது.

    நடிகர் சங்க தலைவரான இன்னசென்ட் எம்.பி. தற் போது உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரிடம் போனில் பேசி அனுமதிபெற்ற பிறகு இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளதாக மம்முட்டி தெரிவித்தார்.



    நடிகர் திலீப் நீக்கத்தை தொடர்ந்து விரைவில் நடிகர் சங்க நிர்வாகிகள் மாற்றப்பட உள்ளனர். அதுபற்றி சங்க தலைவர் இன்னசென்ட் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். நடிகர் சங்கத்தில் கிரிமினல்கள் ஊடுருவியது அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. எங்கள் சங்கத்தில் கிரிமினல்களுக்கு இடம் கிடையாது.

    மேலும் பாதிக்கப்பட்ட நடிகைக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். ஏற்கனவே அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக நாங்கள் எங்கள் வருத்தத்தை பதிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில், கொச்சி பனம்பள்ளி நகரில் நடிகர் மம்முட்டியின் வீடு உள்ளது. நேற்று அவரது வீட்டிற்கு இளைஞர் காங்கிரசார் ஊர்வலமாக வந்து மம்முட்டிக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள். மேலும் அவரது வீடு மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.



    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று காங்கிரசாரை கலைந்து செல்லும்படி கூறினார்கள். ஆனால் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

    கொச்சி ஆலுவாவில் நடிகர் திலீப்பின் வீடு உள்ளது. இந்த வீடு மீதும் யாராவது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மலையாள நடிகர் சங்கத்தில் மோகன்லால் துணைத்தலைவர் பொறுப்பில் உள்ளார். இவருக்கும் திலீப்புக்கும் நல்ல நட்பு உண்டு. மலையாள பட உலகில் திலீப் நுழைந்து பட வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருந்தபோது அவருக்கு மோகன்லால் உதவியுள்ளார். மேலும் தற்போதுவரை திலீப் கைது பற்றி மோகன்லால் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    மம்முட்டி பேட்டி அளித்தபோதும் அருகில் நின்ற மோகன்லால் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இறுகிய முகத்துடன் மவுனமாகவே இருந்தார். இதற்கிடையில் நடிகர்சங்க துணைத்தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் ராஜினாமா செய்யக்கூடும் என்ற பரபரப்பும் நிலவி வருகிறது.
    Next Story
    ×