என் மலர்

    சினிமா

    அரசியலில் குதித்த ரம்யாகிருஷ்ணன்
    X

    அரசியலில் குதித்த ரம்யாகிருஷ்ணன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு நடிகை ரம்யாகிருஷ்ணனுக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், அடுத்ததாக ரம்யா கிருஷ்ணன் அரசியலில் குதித்துள்ளார்.
    ‘பாகுபலி’ இரண்டு பாகங்களிலும் ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி வேடம் பெரிதாக பேசப்பட்டது. அவரது நடிப்புத் திறமைக்கு தீனி போடும் அளவுக்கு நல்ல வாய்ப்பாக இது அமைந்தது.

    தற்போது, தமிழில் கமலுடன் ‘சபாஷ்நாயுடு’, சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படங்களில் நடித்து வருகிறார். இதுவும் பேசப்படும் வேடங்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.



    இதே போல் தெலுங்கிலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்து வருகிறது. தெலுங்கில் நாராரோஹித், ரெஜினா நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் ரம்யாகிருஷ்ணன் அரசியல்வாதியாக அழுத்தமான வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதை முழுவதும் நாயகன் நாராரோஹித், ரம்யாகிருஷ்ணன் ஆகியோரை சுற்றியே வருகிறது என்று கூறப்படுகிறது.

    இது ரம்யாகிருஷ்ணன் நடிப்புத் திறமைக்கு மற்றொரு அங்கீகாரமாக அமையும் என்று தெலுங்கு பட வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
    Next Story
    ×