என் மலர்

    சினிமா

    பாவனா கடத்தல் வழக்கில் நடிகை காவ்யா மாதவன் கைது ஆகிறார்
    X

    பாவனா கடத்தல் வழக்கில் நடிகை காவ்யா மாதவன் கைது ஆகிறார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாவனா கடத்தல் வழக்கில் சதிக்கு உடந்தையாக இருந்ததாக கூறி நடிகை காவ்யா மாதவன் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் பாவனா.

    கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு முடிந்து கொச்சிக்கு காரில் சென்ற போது ஒரு கும்பல் அவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது. அதனை செல்போனிலும் படம் எடுத்தது.

    இந்த சம்பவத்தில் பிரபல ரவுடி பல்சர் சுனில், பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். பணத்துக்காகவே பாவனாவை கடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் பாவனா, கடத்தல் விவகாரத்தில் பிரபல நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. பாவனாவுக்கும், திலீப்புக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்தது. திலீப், அவரது முதல் மனைவி நடிகை மஞ்சு வாரியாரை விவாகரத்து செய்ய பாவனாவே காரணம் என்று கருதியதால், பாவனாவை மிரட்ட திலீப் இச்செயலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.



    இதனை திலீப் மறுத்து வந்தார். தன்னை இந்த வழக்கில் தொடர்புபடுத்த சதி நடப்பதாக குற்றம்சாட்டினார். அவருக்கு மலையாள திரைப்பட நடிகர் சங்கமான அம்மா ஆதரவு கொடுத்தது.

    ஆனால் மலையாள நடிகைகள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் தனியாக அமைப்பு ஒன்றை தொடங்கி கேரள மனித உரிமை கமி‌ஷனில் புகார் செய்தனர்.

    அவர்கள் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி கேரள போலீஸ் டி.ஜி.பி.க்கு நோட்டீசு அனுப்பினர்.

    இதையடுத்து போலீசார் பாவனா, விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிரம் காட்டினர். இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி பல்சர் சுனிலின் அறையில் போலீஸ் உளவாளி ஒருவரை தங்க வைத்தனர்.



    அவர், பல வாரங்கள் பல்சர் சுனிலுடன் நெருக்க மாக பழகினார். இந்த பழக்கத்தின் காரணமாக பாவனா கடத்தல் விவகாரத்தில் வெளிவராத முக்கிய தகவல்களை அந்த நபருடன் பகிர்ந்து கொண்டார். அதில், நடிகர் திலீப்பின் தொடர்பு, பாவனா கடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட செல்போன் வீடியோ ஆதாரங்களை எங்கு மறைத்து வைத்துள்ளோம் என்ற தகவல்கள் வெளியானது.

    அதனை போலீஸ் உளவாளி போலீசாரிடம் தெரிவித்ததும் வழக்கு விசாரணை வேகம் எடுத்தது.

    கடத்தல் வழக்கில் திலீப் மற்றும் திலீப்பின் 2-வது மனைவியும், நடிகையுமான காவ்யாமாதவன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.



    திலீப், காவ்யாமாதவன், பாவனா ஆகியோர் சேர்ந்து சினிமாவில் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் முடக்கினர். பல இடங்களில் நிலங்களை வாங்கி விற்றனர். அப்போது திலீப்புக்கு காவ்யாமாதவனுடன் காதல் ஏற்பட்டது. இதனை பாவனா திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியாரிடம் போட்டுக் கொடுத்தார். அதனால் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்யும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாவனாவின் பெயரில் உள்ள சில சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றித்தரும்படி திலீப் கேட்டார்.

    அதற்கு பாவனா மறுப்பு தெரிவித்தார். இப்படி திலீப்புடன் ஏற்பட்ட உரசலே இருவருக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது.



    இந்த நிலையில்தான் பாவனாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதனை குலைக்கவும், பாவனாவை மிரட்டவும் அவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து அதனை செல்போனில் பதிவுசெய்ய ரவுடி கும்பலுக்கு திலீப் உத்தரவிட்டார்.

    இதற்காக பணம் தருவதாகவும் கூறினார். திலீப் கூறியதால்தான் பாவனா கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார். அந்த காட்சிகள் அடங்கிய மெமரி கார்டு காவ்யா மாதவனின் ஜவுளிக்கடையில் மறைத்து வைக்கப்பட்டது.

    இந்த விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்ட போலீஸ் தனிப்படை ஐ.ஜி. தினேந்திரா காஷ்யப் தலைமையில் திலீப்பைகைது செய்ய நாள் குறித்தது. கடந்த வாரமே இந்த நடவடிக்கை இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது.



    ஆனால் நேற்று தான் திலீப் கைது செய்யப்பட்டார். நேற்று காலையிலேயே கொச்சி போலீஸ் கிளப்புக்கு வரவழைக்கப்பட்ட திலீப் அங்கேயே மாலை 6 மணி வரை சிறை வைக்கப்பட்டார். அதன் பிறகு இந்த தகவலை உயர் அதிகாரிகள் பத்திரிகைகளுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.

    திலீப்பை தொடர்ந்து அவரது உறவினரும், தயாரிப்பாளருமான நாதிர்ஷாவும் கைது செய்யப்பட்டார். சதிச்செயலுக்கு பண உதவி செய்தது, ரவுடிகளுடன் தொடர்பில் இருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர், கைது செய்யப்பட்டதாக கேரள போலீசார் தெரிவித்தனர்.

    இதுபோல சதிச்செய லுக்கு உடந்தையாக இருந்தது, பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை செய்த போது எடுக்கப்பட்ட செல்போன் வீடியோ காட்சிகளை போலீசாருக்கு தெரியாமல் மறைத்தது ஆகிய குற்றங்களுக்காக காவ்யாமாதவனையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    போலீசார் தேடுவதை அறிந்ததும், காவ்யா மாதவனும், அவரது தாயாரும் தலைமறைவாகி விட்டனர். விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×