என் மலர்

    சினிமா

    தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பண்டிகை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு
    X

    தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு 'பண்டிகை' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா - ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள 'பண்டிகை' படத்தின் ரிலீஸ் தேதி தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணா - ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் 'பண்டிகை'. 'டி டைம் டாக்கீஸ்' சார்பில் விஜயலக்ஷமி தயாரித்து இருக்கும் 'பண்டிகை' படத்தை, பெரோஸ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் 'நெகட்டிவ் உரிமையை' வாங்கி இருக்கும் 'ஆரா சினிமாஸ்' மகேஷ் கோவிந்தராஜ், 'பண்டிகை' படத்தை இன்று வெளியிட இருந்தனர்.

    ஆனால் ஜி.எஸ்.டி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3-ஆம் முதல் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை திரையரங்கு உரிமையாளர்கள் நேற்று வாபஸ் பெற்றனர்.



    இந்நிலையில், கடந்த வாரம் ரிலீசான படத்தின் தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு படத்தை ஒருவாரம் தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இவன் தந்திரன், யானும் தீயவன், அதாகப்பட்டது மகாஜனங்களே உள்ளிட்ட 6 படங்கள் கடந்த வாரம் ரிலீசாகி இருந்தன. அந்த படங்களின் தயாரிப்பாளர்கள் நஷ்டம் பெறக் கூடாது என்ற எண்ணத்தில் பண்டிகை படம் வருகிற 14-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    இப்படத்தில் சரவணன், நிதின் சத்யா, கருணாஸ், ப்ளாக் பாண்டி, சபரிஷ், மதுசூதனன் என ஒரு பட்டாளமே நடித்துள்ளது. ஆர்.எச்.விக்ரம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
    Next Story
    ×