என் மலர்

    சினிமா

    நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு அஜய்தேவ்கன் தான் காரணம்: தபு குற்றச்சாட்டு
    X

    நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு அஜய்தேவ்கன் தான் காரணம்: தபு குற்றச்சாட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு நடிகர் அஜய்தேவ்கன் தான் காரணம்” என நடிகை தபு கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    மும்பையில் நடந்த தனியார் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பிரபல இந்தி நடிகை தபு கலந்துகொண்டார். தொகுப்பாளர் அவரிடம் ஏன் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதில் அளித்து 45 வயதான நடிகை தபு கூறியதாவது:-

    நான் ஏன் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறேன் என்று கேட்கிறீர்கள். இதற்கு காரணம் நடிகர் அஜய்தேவ்கன் தான். நானும், அவரும் 25 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். அஜய்தேவ்கன் எனது ஒன்றுவிட்ட சகோதரரின் நண்பர்.



    எனது வாழ்க்கை தொடக்கத்தில் இருந்தே அஜய்தேவ்கன் என்னுடன் ஒன்றாக இருந்தார். எங்கு சென்றாலும் அவர் என்னுடன் வருவார். யாராவது என்னை கேலி செய்தால் பொறுத்துக்கொள்ள மாட்டார். அவர்களை பிடித்து மிரட்டுவார். என்னுடன் இருந்த தருணங்களை அவர் உணர்வார்.

    இவ்வாறு அவர் பதிலளித்தார்.

    நடிகர் அஜய்தேவ்கன் 1999-ம் ஆண்டு இந்தி நடிகை கஜோலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை தபு தான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு அஜய்தேவ்கன் தான் காரணம் என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×