என் மலர்

    சினிமா

    நகைச்சுவை நடிகரை தாக்கி நகை - பணம் பறிப்பு
    X

    நகைச்சுவை நடிகரை தாக்கி நகை - பணம் பறிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சேலத்தில் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியை தாக்கி நகை-பணம் பறித்த ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
    சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் கொட்டாச்சி (வயது 40). இவர் பத்ரி, பெண்ணின் மனதை தொட்டு, பாளையத்து அம்மன், யூத், தூள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராகவும், பல படங்களில் நடிகர் விவேக்கிற்கு உதவியாளராகவும் நடித்துள்ளார். தற்போது திருப்பூர் அருகே ‘வயக்காட்டு மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது.

    இந்த படத்தில் நடிகர் கொட்டாச்சியும் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை செல்ல திட்டமிட்டார். அதற்காக திருப்பூரில் இருந்து பஸ் மூலம் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு நள்ளிரவு 1 மணிக்கு வந்தார். அங்கிருந்து தனியார் டிராவல்ஸ் மூலம் சென்னை செல்ல நினைத்தார்.

    அந்த வேளையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கொட்டாச்சியை வழிமறித்து, “சார்... எங்கே போகவேண்டும். ஆட்டோ தயாராக உள்ளது” என்றார். அதற்கு அவர், தனியார் டிராவல்ஸ் மூலம் சென்னை செல்ல வேண்டும் என்றும், அந்த பஸ் நிற்கும் இடத்திற்கு போகவேண்டும் எனவும் தெரிவித்தார்.



    சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு எதிரிலேயே அந்த தனியார் பஸ் டிராவல்ஸ் அலுவலகம் இருந்தும், ஆட்டோ டிரைவரும், அவரது நண்பர்கள் 2 பேரும் ஆட்டோவில் நடிகர் கொட்டாச்சியை ஏற்றிக்கொண்டு சற்று தொலைவில் உள்ள நரசோதிப்பட்டிக்கு அழைத்துச் சென்றனர். தவறான இடத்திற்கு செல்வதை அறிந்த கொட்டாச்சி, ஆட்டோவை நிறுத்தச் சொல்லி தகராறு செய்தார். தனது செல்போனில் உதவிக்காக சேலத்தை சேர்ந்த நடிகர் பெஞ்சமினுக்கு போன் செய்தார். அவர் அயர்ந்து தூங்கியதால் போனை எடுக்கவில்லை.

    அப்போது ஆட்டோவில் வந்த ஒருவர், கொட்டாச்சியின் செல்போனை பறித்தார். பின்னர் 3 பேரும் சேர்ந்து அவரை அடித்து உதைத்தனர். வலி தாங்காமல், “என்னை அடிக்காதீங்க... நான் நடிகர் கொட்டாச்சி.. என்னை விட்டுவிடுங்கள்” என அவர் கதறினார்.

    ‘உன்னைப் பார்த்தால் நடிகர்போல தெரியவில்லையே’ எனக்கூறிய மூவரும், கொட்டாச்சி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி, ரூ.2,500 ரொக்கம், செல்போன், ஆதார் கார்டு, ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்துக்கொண்டு அவரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். நரசோதிப்பட்டியில் நேற்று அதிகாலை கொட்டாச்சி தனியாக தவித்தபடி நின்றிருந்தார்.



    அப்போது அந்த வழியாக சென்ற 2 வாலிபர்களிடம், நடந்த விவரத்தை கொட்டாச்சி தெரிவித்தார். பின்னர் நடிகர் பெஞ்சமினை மீண்டும் தொடர்புகொண்டு பேசி அவரது வீட்டிற்கு சென்று தங்கினார்.

    சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் நேற்று பகலில் இதுதொடர்பாக புகார் செய்தார். போலீசார் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் பஸ் நிலையத்தில் இரவு வேளையில் சவாரிக்கு நின்ற ஆட்டோ டிரைவர்கள் யார், யார்? என்றும் விசாரித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து நடிகர் கொட்டாச்சி கூறுகையில், ‘இன்று (அதாவது நேற்று) எனது பிறந்தநாள். பிறந்தநாள் அன்று இந்த சம்பவம் நடந்தது வேதனையாக உள்ளது. இன்றைய தினம் எனது மனைவி எனக்கு கார் பரிசளிக்க நினைத்திருந்தார். அதற்குள் இப்படி நடந்துவிட்டது’ என்றார்.
    Next Story
    ×