என் மலர்

    சினிமா

    சினிமாவில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட சில நடிகர்கள் சதி: திலீப் பரபரப்பு பேட்டி
    X

    சினிமாவில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட சில நடிகர்கள் சதி: திலீப் பரபரப்பு பேட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாவனா கடத்தல் வழக்கில் தன்னை மாட்டிவிட்டு சினிமாவில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட சில நடிகர்கள் சதி செய்கிறார்கள் என்று திலீப் பேட்டியளித்துள்ளார்.
    நடிகை பாவனா விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் நடிகர் திலீப் நிருபர்களிடம் கூறியதாவது:- நடிகை பாவனா விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்தி குற்றவாளியாக்க சிலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்காக பணம் செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள். சினிமாவில் இருந்தும், என் குடும்ப வாழ்க்கையையும் ஒழித்துக்கட்ட சில நடிகர்கள், நடிகைகள் சதி செய்கிறார்கள்.

    இதற்காகவே எனக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. முதலில் அதைப்பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்தது. அந்த கடிதத்தை தெளிவாக படித்தால் இந்த விவகாரத்தில் எனக்கு தொடர்பு இல்லையென்பது நன்றாக தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    நடிகர் திலீப்பின் உறவினரும், டைரக்டருமான நாதிர்ஷா கூறியதாவது:- திலீப்பிடமிருந்து பணம் பறிக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அவர்கள்தான் விஷ்ணுமூலம் என்னையும், திலீப்பின் மானேஜர் அப்புண்ணியையும் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அவர்களின் பேச்சை நாங்கள் பதிவு செய்துள்ளோம். ரூ.1½ கோடி பணம் கேட்ட தகவலை போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×