என் மலர்

    சினிமா

    மீண்டும் சரித்திரப் படத்தில் நடிக்கும் ராணா?
    X

    மீண்டும் சரித்திரப் படத்தில் நடிக்கும் ராணா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    `பாகுபலி-2' படத்தை தொடர்ந்து நடிகர் ராணா தெலுங்கு பட உலகின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான சுதாகர் இயக்கத்தில் மீண்டும் சரித்திரப் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வசூலை குவித்து வரும் படம் `பாகுபலி-2'. `பாகுபலி' படத்தின் தொடர்ச்சியாக வெளியான `பாகுபலி-2' ரசிகர்களிடையே ஏகோபத்திய வரவேற்பை பெற்றதை அடுத்து, உலக சினிமாவில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. சரித்திரப் பின்னணியில் உருவாகிய `பாகுபலி' படம் தற்போது வரை ரூ.1708 கோடியை வசூலித்துள்ளது.

    `பாகுபலி' படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.



    இதில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்த ராணா, அடுத்ததாக `நேனு ராஜா நேனு மந்திரி' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அடுத்ததாக ராணா தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநரான குணசேகர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்து புராணத்தில் இடம்பெறும் பக்தப் பிரகலாதனின் கதையை படமாக இயக்க இருக்கிறாராம். இதில் பிரகலாதனின் தந்தையான இரணியகசிபு கதாபாத்திரத்தில் நடிக்க ராணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக குணசேகர் இயக்கத்தில் உருவான சரித்திர படைப்பான `ருத்ரமாதேவி' படத்தில் ராணா நடித்திருந்தார். அந்த படத்தில் அனுஷ்கா, அல்லு அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
    Next Story
    ×