என் மலர்

    சினிமா

    நாசர் தலைமையில் நடிகர் சங்க செயற்குழு கூட்டம்
    X

    நாசர் தலைமையில் நடிகர் சங்க செயற்குழு கூட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னை தியாகராயநகரில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடந்தது.
    சென்னை தியாகராயநகரில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக உள்ள நிலத்தில் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான வேலைகள் தொடங்கின. இந்த கட்டிடத்தை சங்கத்துக்கு சொந்தமில்லாத நிலத்திலும் ஆக்கிரமித்து கட்டுவதாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதி உத்தரவின் பேரில், நடிகர் சங்க நிலம் அளக்கப்பட்டு, கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார். நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் மற்றும் ராஜேஷ், பிரசன்னா, உதயா, ஸ்ரீமன், மனோபாலா, பிரேம், டி.பி.கஜேந்திரன், அஜய்ரத்னம், நிரோஷா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

    இந்த கூட்டத்தில், நடிகர் சங்க பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நடிகர் சங்க கட்டிடம், கோர்ட்டு வழக்கு போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. சட்ட நடவடிக்கைகள் மூலம் கட்டிட வேலைகளை தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
    Next Story
    ×