என் மலர்

    சினிமா

    அரசியல் கட்சிகளைபோல் மன்றங்களை மாற்றி அமைக்கும் கரூர் ரஜினி ரசிகர்கள்
    X

    அரசியல் கட்சிகளைபோல் மன்றங்களை மாற்றி அமைக்கும் கரூர் ரஜினி ரசிகர்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கரூர் ரஜினி ரசிகர்கள் அரசியல் கட்சிகளை போன்று வார்டு வாரியாக மன்றங்களை மாற்றி அமைக்கும் பணியை செய்து வருகிறார்கள்.

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வர மாட்டாரா? என 20 ஆண்டுகளாக விவாதம் நடந்து வருகிறது. அதற்கு தற்போது விடை கிடைக்கும் என பொதுமக்களும், ரசிகர்களும் நம்புகிறார்கள்.

    கடந்த மாதம் 15-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை தனது ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டார். முதல் நாள் சந்திப்பின்போது நான் ஒருவேளை அரசியலுக்கு வர நேரிட்டால் பணம் சம்பாதிக்கும் எண்ணம் உள்ளவர்களை உடன் வைத்திருக்க மாட்டேன் என சூளுரைத்தார்.

    பின்னர் இரு தினங்கள் கழித்து ரசிகர்களை சந்தித்த போது தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை. போர் வரும் போது பார்த்து கொள்வோம் என அரசியலுக்கு வருவதை சூசகமாக தெவித்தார். இது அவரது ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. தலைவர், 100 சதவீதம் அரசியலுக்கு வருவது உறுதியாகி விட்டது என அடித்து சொல்கிறார்கள்.


    எனவே மன்றப்பணிகளில் வழக்கத்துக்கு மாறாக அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர் மன்றங்கள் உள்ளன. இதில் 600-க்கும் மேற்பட்ட மன்றங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற மன்றங்கள் ரஜினியின் தடையால் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் மன்ற கட்டுப்பாடுகளுடன் அவைகள் முறையாக இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

    ரஜினி அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ள அவரது ரசிகர்கள் மன்றங்களை முறைப்படுத்தும் பணிகளில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். அரசியல் கட்சிகள் போன்று வார்டுக்கு ஒரு மன்றம் என்ற ரீதியில் மன்றங்களை முறைப்படுத்த தொடங்கியுள்ளனர்.

    இந்த பணிகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் மாவட்ட தலைமை மன்றத்துடன் தொடர்பு கொண்டு வருகின்றனர்.


    இதுபற்றி மன்ற தரப்பில் கூறும்போது, தலைவர் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். மக்களும் எப்போது வருவார் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை உறுதி செய்து கொண்ட பிற கட்சி நிர்வாகிகள் புதிய மன்றங்கள் தொடங்க அனுமதி கிடைக்குமா? என கேட்டு வருகிறார்கள்.

    ஆனால் யாருக்கும் புதிய மன்றங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்படவில்லை. தினமும் தலைமை மன்றத்துக்கு மன்றப்பணிகள் தொடர்பாக தொலைப்பேசி அழைப்புகள் வருகின்றன. மாநில தலைமை மன்றத்தில் இருந்து எந்த அறிவுரையும் கூறவில்லை. ரசிகர்களாகதான் மன்றத்தை முறைப்படுத்துகின்றனர். போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என தலைவர் தெரிவித்துள்ளார். எனவே நாங்கள் போருக்கு தயாராகிறோம் என்றனர்.

    Next Story
    ×