என் மலர்

    சினிமா

    மரகத நாணயம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெய் ஆனந்த்
    X

    மரகத நாணயம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெய் ஆனந்த்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திறப்பு விழா படத்தின் கதாநாயகன் ஜெய் ஆனந்த், ‘மரகத நாணயம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
    ‘காஞ்சனா’ திரைப்படத்தின் மூலம் ராகவா லாரன்சால் அறிமுகப்படுத்தவர் நடிகர் ஜெய் ஆனந்த். மதுவிலக்கை வலியுறுத்தி சமீபத்தில் வெளியான ‘திறப்பு விழா’ படத்தில் கதாநாயகனாக நடித்து தன்னுடைய தேர்ந்த நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் திரையுலகினரின் பாராட்டுக்களை பெற்றிருக்கிறார் ஜெய் ஆனந்த்.

    ‘திறப்பு விழா’ படத்தின் இயக்குனர் கே.ஜி.வீரமணி, ஜெய் ஆனந்தை தியேட்டர் லேப் மற்றும் கோமல் சுவாமிநாதனின் நாடகக் குழுக்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது இவரது சிறந்த நடிப்பாற்றலை பார்த்து தேர்ந்தெடுத்து ‘திறப்பு விழா’ படத்தில் கதநாயகனாக நடிக்க வைத்திருக்கிறார்.



    முதல் படத்திலேயே மதுவுக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் நாயகன் வேடத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன் என்கிறார் ஜெய் ஆனந்த். அடுத்து நிக்கி கல்ராணியுடன் இணைந்து எதிர்நாயகனாக ‘மரகத நாணயம்’ படத்தில் நடித்து வருகிறார். நாயகனாக ஆதி நடிக்கிறார்.

    ஜி.வி.பிரகாஷுடன் ‘4ஜி’ படத்திலும் இணைந்து நடித்து வருகிறார். ‘முண்டாசு பட்டி’ படத்தின் இயக்குனர் ராம் இயக்கும் ‘மின்மினி’ படத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிக்கிறார்கள். இதில் முக்கிய வேடத்தில் ஜெய் ஆனந்த் நடிக்கிறார்.

    இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. கவிப்பேரரசு வைரமுத்துவின் உறவுப் பெண்ணை திருமணம் செய்துகொண்டிருக்கிறார். ஜெய் ஆனந்தை தன்னுடைய மகன் போல் பாவித்துவரும் சிவகுமார் தான் இவரது திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×