என் மலர்

    சினிமா

    தங்கல்-பாகுபலி-2 படங்களை ஒப்பிடாதீர்கள்: அமீர்கான்
    X

    தங்கல்-பாகுபலி-2 படங்களை ஒப்பிடாதீர்கள்: அமீர்கான்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தங்கல் மற்றும் பாகுபலி-2 படங்களை ஒன்றுக்கொன்று ஒப்பிட வேண்டாம் என்று பாலிவுட் நடிகர் அமீர்கான் வலியுறுத்தியுள்ளார்.
    நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'தங்கல்'. இப்படம் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்தது. ரூ.700 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய படங்களிலேயே உலக அளவில் அதிகமான வசூலை பெற்ற படம் என்ற புதிய சாதனையை படைத்திருந்தது.

    இந்த சாதனையை சமீபத்தில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி’ படம் முறியடித்து ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து, ‘தங்கல்’ படம் சீனாவில் வெளியாகி அங்கேயும் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. அங்கு ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து ‘பாகுபலி-2’ சாதனையை தொடுவதற்கு முன்னேறிக் கொண்டு வருகிறது.



    ‘தங்கல்' படத்தின் வசூல் சாதனையை அடுத்து, ‘பாகுபலி-2' படம் வருகிற ஜுலை மாதம் சீனாவில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சீனாவிலும் ‘தங்கல்’ படத்தின் சாதனையை ‘பாகுபலி-2’ முறியடிக்கும் என்று இரு படங்களை ஒப்பிட்டு செய்திகள் சமீபகாலமாக வெளியாகி வருகிறது.

    இந்நிலையில், தங்கல் மற்றும் பாகுபலி-2 படங்களை ஒன்றுக்கொன்று ஒப்பிட வேண்டாம் என்று பாலிவுட் நடிகர் அமீர்கான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமீர்கான் பேசுகையில், “தங்கல் படம் சீனா மற்றும் உலக அளவில் இந்த அளவிற்கு பாராட்டுக்களை பெற்று வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் படங்களில் எந்தவொரு ஒப்பீடும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ‘தங்கல்’,
    ‘பாகுபலி-2’ ஆகிய இரண்டு படங்களும் நாட்டிற்கு பெருமை சேர்த்த நல்ல படங்கள் ஆகும்.

    நான் இன்னும் ‘பாகுபலி-2’ படத்தை பார்க்கவில்லை. அது மிகவும் வெற்றிகரமான படம். அந்தப் படத்தைப் பற்றி பல நல்ல செய்திகளை கேட்டு வருகிறேன்” என்றார்.

    Next Story
    ×