என் மலர்

    சினிமா

    எனது திறமைக்கு தீனி போடுங்கள்: நடிகை ரெஜினா
    X

    எனது திறமைக்கு தீனி போடுங்கள்: நடிகை ரெஜினா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, ரெஜினாவுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதில் எனது திறமைக்கு தீனி போடும் வாய்ப்புகளை கொடுங்கள் என்று ரெஜினா கேட்டிருக்கிறார்.
    `கண்ட நாள் முதல்' என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிய ரெஜினா, `கேடி பில்லா கில்லடி ரங்கா' படத்தின் மூலம் தமிழில் பிரபலமாகினார். பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்து வந்த ரெஜினா சமீபத்தில் `மாநகரம்', ‘சரவணன் இருக்க பயமேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இருபடங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இதையடுத்து, ரெஜினா தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘ஜெமினி கணேசனும், சுருளிராஜனும்’, ‘ராஜ தந்திரம்-2’ படங்களில் ரெஜினா நடித்து வருகிறார். இது தவிர பல புதிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. பல இயக்குனர்கள் ரெஜினாவுக்கு கதை சொல்ல வந்துள்ளனர்.



    இதுபற்றி கூறிய ரெஜினா, “நான் கவர்ச்சி நாயகியாக நடிக்க விரும்பவில்லை. அப்படி நடிப்பதும் பிடிக்கவில்லை. திறமையை காட்டி நடிக்க வாய்ப்புள்ள வேடங்களைத்தான் விரும்புகிறேன். அது போன்ற கதைகளில் நடிக்கவே ஆசைப்படுகிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.
    Next Story
    ×