என் மலர்

    சினிமா

    ரஜினி அரசியலுக்கு வருவாரா? நெட்டிசன்களால் கிசுகிசுக்கப்படும் கேள்விகள் - ஒரு பார்வை
    X

    ரஜினி அரசியலுக்கு வருவாரா? நெட்டிசன்களால் கிசுகிசுக்கப்படும் கேள்விகள் - ஒரு பார்வை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரஜினியின் அரசியலுக்கு வருவாரா? என்பது பற்றி நெட்டிசன்களால் பல கேள்விகள் கிசுகிசுகப்பட்டு வருகின்றன.
    தமிழக மக்களால் “சூப்பர் ஸ்டார்” என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடுவாரா? மாட்டாரா? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு கடந்த 20 ஆண்டுகளாக நிலவி வருகிறது. 1990-களில் ரஜினி அரசியலுக்கு வருவார்... என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அரசியலில் ஈடுபடாமல் ஆன்மீகம் பக்கம் திரும்பினார். அதுமுதல் தொடர்ந்து பலமுறை இமயமலைக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில், அவ்வப்போது அரசியல் பிரமுகர்கள் அவரை சந்தித்தால், ரஜினி அந்த கட்சியில் இணையப் போகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டன. ஆனால் நான் எந்தக் கட்சியிலும் இல்லை. யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை என்று ரஜினி கூறி வந்தார்.

    இந்நிலையில், ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் தமிழக அரசியலில் தற்போது பெரிய தலைவர்கள் யாரும் இல்லாமல் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. அதற்கேற்றாற் போல் ரஜினி ரசிகர்களும் “தலைவா... அரசியலுக்கு வா.. தலைவா வா" என்று அழைத்தபடி இருக்கின்றனர்.



    அவர்களின் அழைப்பினை ஏற்கும் விதமாக ரஜினி அரசியிலில் ஈடுபட விரும்புவது போல் பேசி வருகிறார். அதாவது கடந்த 5 நாட்களாக ரஜினியுடன் அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரசிகர்கள் முன்பு உரையாற்றிய ரஜினி, இப்போது நான் நடிகன், நாளை நான் யார் என்பதை ஆண்டவன் தான் முடிவு செய்ய வேண்டும், நாளை நான் அரசியலுக்கு வந்தால் அதை ஆண்டவன் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    ரஜினியின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு கருத்தும், எதிர்ப்பு கருத்தும் வலுத்து வருகிறது. இதில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட இணைய தளங்களில் கிண்டலான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதில் சிலவற்றை பார்க்கலாம்.



    * பாகுபலி படத்துல மாதிரி போர் வந்தாதான் வருவேன்னு சொன்னீங்களே, அப்போ காளகேயர்கள் யாரு?

    * ரஜினி சார். அரசியலில் குதிப்பது என்பது குளத்தில் குதிப்பது போல் அல்ல.... சமாதியில் போய் தியானம் செய்ய வேண்டும். அதவிட்டுட்டு இமயமலைக்கு போனால் ஆத்தா கோபத்திற்கு ஆளாயிடுவீங்க.

    * ஆளு பாக்க கருப்பாதானே இருக்கீங்க... தமிழன்னு சொன்னாலே போதுமே! அப்புறம் எதுக்கு பச்சை தமிழன்னு பொய் சொல்றீங்க.

    * ‘‘கடவுள் கையிலே என் வாழ்க்கை’’ இன்று நான் நடிகன். நாளை நான் யார்? என்பதை கடவுளே முடிவு செய்வார்.

    * 25 வரு‌ஷமா இந்த ஒரே டயலாக்க இந்த ஆளு சொல்லி ஏமாத்துறார். அது தெரியாம புதுசா பேசுற மாதிரி. கைதட்டி விசில் அடிக்கிறாங்க.

    * எந்த பொறுப்பு கொடுத்தாலும் நேர்மையாக செயல்படுவேன்.

    * இது எல்லாம் அண்ணாமலை படத்திலே பாத்துட்டோம். இப்ப போய் சீன் போட்டுக்கிட்டு.... தண்ணிய குடி.. தண்ணி குடி.

    * புது படம். ரிலீஸ் ஆகும் போது அரசியலுக்கு வருவேனு ரஜினி சொல்றதும் அப்ரம் கம்முன்னு இருக்கிறதும் சகஜம்.

    * அவரு வருவாரு ஆனா.... வரமாட்டாரு...



    இவ்வாறு நெட்டிசன்கள் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்தும், சிலர் அவரை கலாய்த்தும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறு பகிரப்படும் கருத்துக்களை தான் பார்த்ததாக கூறிய ரஜினி, சில தரக்குறைவான கருத்துக்களால் தான் வேதனை அடைந்ததாக நேற்று தெரிவித்திருந்தார். மேலும் தனது ரசிகர்களும் கவலைப்பட்டிருப்பார்கள். இதுகுறித்து தனது ரசிகர்களுக்கு அவர் கூறியிருந்ததாவது, எதிர்ப்பு இன்றி வளரமுடியாது, எதிர்ப்புதான் அரசியலில் மூலதனம் என்று நேற்று ரஜினிகாந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Next Story
    ×