சினிமா
நயன்தாரா ரசிகர்களுக்கு 24 மணி நேர இடைவெளியில் இரட்டை விருந்து
24 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து நயன்தாரா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கிடைக்கவுள்ளது.
‘டோரா’ படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வேகமாக உருவாகி வரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. இப்படத்தை அஜய் ஞானமுத்து என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டீசரையும் அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதுவும் 24 மணி நேர இடைவெளிக்குள். அதாவது நாளை (17.05.2017) மாலை 7 மணிக்கு ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் டீசரையும் நாளை மறுநாள் (18.05.2017) மாலை 7 மணிக்கு இப்படத்தின் டீசரையும் அடுத்தடுத்து ரிலீஸ் செய்து நயன்தாரா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கவிருக்கிறார்கள்.
இப்படத்தில் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யாப் வில்லனாக நடிக்கிறார். ராக்ஷி கன்னாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திரில்லர் படமாக உருவாகிவரும் இப்படத்தில் நயன்தாரா 4 வயது குழந்தைக்கு தாயாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டீசரையும் அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதுவும் 24 மணி நேர இடைவெளிக்குள். அதாவது நாளை (17.05.2017) மாலை 7 மணிக்கு ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் டீசரையும் நாளை மறுநாள் (18.05.2017) மாலை 7 மணிக்கு இப்படத்தின் டீசரையும் அடுத்தடுத்து ரிலீஸ் செய்து நயன்தாரா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கவிருக்கிறார்கள்.
இப்படத்தில் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யாப் வில்லனாக நடிக்கிறார். ராக்ஷி கன்னாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திரில்லர் படமாக உருவாகிவரும் இப்படத்தில் நயன்தாரா 4 வயது குழந்தைக்கு தாயாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story