என் மலர்

    சினிமா

    முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் விஷால்
    X

    முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் விஷால்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகர் விஷால் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அப்படத்திற்கு `நாளை நமதே' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படம் `நாளை நமதே'. இப்படத்தில் நடிக்க நடிகர் விஷால் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதுவும் இப்படத்தில் அவர் முன்று வேடங்களில் நடிக்கவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    இயக்குனர் பொன்ராமிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய வெங்கடேசன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    இப்படத்தில் விஷால் ஜோடியாக இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். மேலும் காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் சதிஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். பிரம்மாண்டமாக உருவாக உள்ள இப்படத்தில், பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.



    இப்படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.

    விஷால் தற்போது, `துப்பறிவாளன்', `இரும்புத்திரை', `வில்லன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். `கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
    Next Story
    ×