சினிமா
விக்ரமுக்கு வில்லனாகும் பிரித்திவிராஜ்
`ராவணன்' படத்திற்கு பிறகு விக்ரம் வில்லனாக பிருத்விராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
தமிழில் ‘கனா கண்டேன்’ படத்தில் வில்லனாக அறிமுகம் ஆனவர் பிரித்திவிராஜ். அதன் பிறகு ஹீரோ ஆனார். ‘காவிய தலைவன்’ படத்தில் சித்தார்த்துடன் இணைந்தார். இதிலும் வில்லனாக நடித்தார்.
சமீபத்தில் இந்தியில் வெளியான ‘நான் சபானா’ படத்திலும் அதிரடி வில்லனாக நடித்தார். தொடர்ந்து மலையாள படங்களில் நாயகனாக நடித்து வரும் பிரித்திவிராஜ் 2 ஆண்டுகளாக தமிழ் படங்களுக்கு இடைவெளி விட்டு இருந்தார்.
இப்போது, கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் பிரித்திவிராஜ் வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, ‘ராவணன்’ படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்த பிரித்திவிராஜ் இப்போது அவருடன் மோதும் அதிரடி வில்லனாக நடிக்க இருக்கிறார்.
சமீபத்தில் இந்தியில் வெளியான ‘நான் சபானா’ படத்திலும் அதிரடி வில்லனாக நடித்தார். தொடர்ந்து மலையாள படங்களில் நாயகனாக நடித்து வரும் பிரித்திவிராஜ் 2 ஆண்டுகளாக தமிழ் படங்களுக்கு இடைவெளி விட்டு இருந்தார்.
இப்போது, கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் பிரித்திவிராஜ் வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, ‘ராவணன்’ படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்த பிரித்திவிராஜ் இப்போது அவருடன் மோதும் அதிரடி வில்லனாக நடிக்க இருக்கிறார்.
Next Story