என் மலர்

    சினிமா

    சினிமா தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் பரிசு: விஜய் சேதுபதிக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியன் நன்றி
    X

    சினிமா தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் பரிசு: விஜய் சேதுபதிக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியன் நன்றி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சினிமா தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கத்தை பரிசாக கொடுக்க முன்வந்த விஜய் சேதுபதிக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியன் நன்றி தெரிவித்துள்ளது.
    சவுத் இந்தியன் சினி, டெலிவிஷன் ஆர்டிஸ் மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ் யூனியன் சங்கம் சார்பில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சங்கத்தின் தலைவர் கே.ஆர்.செல்வராஜ் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது,

    "சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட மதியழகன், கண்ணன், மகாலட்சுமி ஆகியோர், சங்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கை தொடர்ந்து, உறுப்பினர்களின் ஊதியத்தை யூனியன் மூலம் பெறுவதற்கும், ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

    இந்த வழக்கின் இறுதி விசாரணையின் போது, யூனியன் மூலம் ஊதியம் வழங்குதல் மற்றும் 10 சதவீதம் பிடித்தம் செய்வற்கான காரணைத்தை கேட்டு அறிந்துக்கொண்ட நீதிபதி, விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டதுடன், அந்த மூன்று உறுப்பினர்களை நீக்கியது செல்லும் என்றும் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார். இதையடுத்து வழக்கம் போல, ஊழியர்களுக்கான ஊதியம் யூனியன் மூலமாலவே வழங்கப்பட்டு வருகிறது.



    நீதிமன்ற வழக்கால் நடத்தப்படாமல் இருக்கும் 2016 - 2018 ஆம் ஆண்டுக்கான யூனியன் நிர்வாகிகள் தேர்தல், வழக்கு தீர்ப்புக்கு பிறகு முறைப்படி நடத்தப்படும்.

    டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு பெப்சி அமைப்பில் அங்கம் வகிக்கும் சவுத் இந்தியன் சினி, டெலிவிஷன் ஆர்டிஸ்ட் & டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் தனது ஆதரவை தெரிவிக்கிறது. அதன்படி, 25-ஆம் தேதி சங்கத்தைச் சேர்ந்த டப்பிங் கலைஞர்கள் எந்தவித டப்பிங் வேலையிலும் ஈடுபட மாட்டார்கள்.

    உலகாயுதா அமைப்பின் சார்பில் தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு துறையை சேர்ந்த 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் தங்க நாணயம் வழங்கி கெளரவிக்க உள்ளனர். எங்கள் சங்கத்தின் சார்பில், எங்கள் யூனியனின் முன்னாள் தலைவர் டத்தோ ராதாரவி, ஹேமமாலினி, எஸ்.என்.சுரேந்தர் ஆகியோர் தங்க நாணயம் பெறுகிறார்கள். அவர்களுக்கு யூனியன் வாழ்த்துக்களை தெரிவித்திக் கொள்வதோடு, இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கும், 100 சவரன் தங்கத்திற்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்ட நடிகர் விஜய் சேதுபதிக்கும் யூனியன் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். விஜய் சேதுபதி எங்கள் யூனியனின் உறுப்பினர் என்பதில் பெருமை கொள்கிறோம்." என்று தெரிவித்தார்.

    இந்த சந்திப்பின்போது, யூனியனின் செயலாளர் எம்.ராஜேந்திரன், பொருளாளர் டி.என்.பி.கதிரவன், உபதலைவர் டி.கோபி, இணைச் செயலாளர் எம்.நாராயணன், செயற்குழு உறுப்பினர்கள் கே.தேவி, கே.மாலா, டி.மோகன்குமார், எஸ்.சுப்ரமணி, பி.வெங்கடசாமி, பி.
    சாந்தகுமார், யோகேஸ்வரி, மேலாளர் அம்மு ஆகியோர் உடன் இருந்தார்கள்.
    Next Story
    ×