என் மலர்

    சினிமா

    நடிப்பால் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க முடியாது: சோனாக்‌ஷி சின்கா
    X

    நடிப்பால் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க முடியாது: சோனாக்‌ஷி சின்கா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிப்பால் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க முடியாது என்று நடிகை சோனாக்‌ஷி சின்கா தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    இந்தி நடிகை சோனாக்‌ஷி சின்கா மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நடிப்பின் மூலம் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க முடியாது என்பதை என் வாழ்வில் வெகு சீக்கிரமாகவே கற்றுக்கொண்டேன். என்னுடைய நடிப்பில் நான் மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொள்கிறேன். அப்போது தான் பிறரை மகிழ்விக்க முடியும். வாழ்வின் இந்த அணுகுமுறை சினிமாவில் மிகவும் உதவிகரமாக இருக்கிறது.

    உங்களுக்கு என்னை பிடித்தால், சிறந்தது. பிடிக்காவிட்டால், நல்லது. இதனால் தான் என்னால் என்னுடைய சொந்த நிபந்தனைகளின்படி வேலை செய்ய முடிகிறது. எனக்கு பிடித்த வேலைகளை செய்கிறேன். யாரிடம் இருந்தும் அழுத்தங்களை பெற்று அதில் மூழ்கிவிட மாட்டேன்.



    தோல்வியை கண்டதும் கவலைப்பட்டு, துவண்டு போய்விட மாட்டேன். ஒரு படம் ‘ஹிட்’ ஆனால், நான் புகழின் உச்சியை எட்டிவிட்டதாக எண்ணி கத்திக்கூச்சலிட மாட்டேன். அதேசமயம், தோல்வி அடைந்தால் மூலையில் முடங்கி கிடக்க மாட்டேன்.

    வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் நகரட்டும். வெற்றியும், தோல்வியும் ஒவ்வொருவரது வாழ்விலும் ஒரு அங்கம். அது பள்ளிக்கூட மாணவர்களாக இருக்கட்டும் அல்லது பிரதமராக இருக்கட்டும். வெற்றி - தோல்வி அனைவருக்கும் பொதுவானது. வாழ்வில் ஏற்ற, இறக்கம் இல்லை என்றால், என்ன மாதிரியான வாழ்க்கை இது?.

    இவ்வாறு சோனாக்‌ஷி சின்கா தெரிவித்தார்.
    Next Story
    ×