என் மலர்

    சினிமா

    இணையதளங்களில் படங்கள் வெளியாவதை தடுக்கவேண்டும்: மத்திய அமைச்சரிடம் விஷால் கோரிக்கை
    X

    இணையதளங்களில் படங்கள் வெளியாவதை தடுக்கவேண்டும்: மத்திய அமைச்சரிடம் விஷால் கோரிக்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவிடம் இணையதளங்களில் படங்கள் வெளியாவதை தடுக்கவேண்டும் என்று விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.

    சென்னை, ஏப். 23-

    மத்திய மந்திரி வெங்கையா நாயுடு இன்று சென்னை வந்தார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அவரை நடிகர் கமல் ஹாசன், நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். இதில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சுரேஷ், நடிகர் கார்த்தி, டைரக்டர் பிரியதர்‌ஷன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    அப்போது நடிகர் விஷால் வெங்கையாநாயுடுவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில், திரைப்படங்கள் திரைக்க வருவதற்கு முன்னரே இணைய தளங்களில் வெளிவருவதால் தயாரிப் பாளர்கள் மிகவும் பாதிப் படைகிறார்கள். தயாரிப் பாளர்கள் வருமானம் ஈட்டும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். முன் கூட்டியே இணைய தளங்களில் திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.


    இணைய தளங்களில் திரைப்படங்கள் முன் கூட்டியே வெளியாவதை தடுப்பது பற்றி தகவல் தொழில் நுட்பத்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்து அதற்கான வழிமுறைகள் ஆராயப்படும்.

    ஜி.எஸ்.டி. வரி விதிப் பால் பிராந்திய மொழி திரைப்படங்களுக்கு ஏற் படும் பாதிப்புகள் பற்றி விவாதிக்க மும்பை மற்றும் தென் மாநில சினிமா துறை பிரதிநிதிகளை அழைத்து நிதி மந்திரி அருண்ஜெட்லியை சந்தித்து விவாதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    சினிமாவில் சென்சார் கூடாது என்ற கருத்தும் உள்ளது. அப்படியானால் சினிமாவில் கட்டுக்கோப்பு இல்லாமல் ஆகிவிடும் எனவே அதற்கான மாற்று வழிகள் பற்றி பரிசீலிக்கப்படும். இது தொடர்பாக முட்கல் கமிட்டி பரிந்துரைகள் ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் வெளியே வந்த நடிகர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது-

    திருட்டு வீடியோ, இணைய தளங்களில் சினிமாக்கள் வெளிவருவதை தடுப்பது பற்றி மத்திய மந்திரியிடம் கூறினோம். அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

    திருட்டு வீடியோ பிரச்சினை தமிழகத்துக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள பிரச்சினை. தமிழக திரைப்படத்துறை வளர்ச்சிக்கான சில கோரிக் கைகளையும் முன்வைத் துள்ளோம். அவற்றை நிறைவேற்றி தருவதாக கூறி இருக்கிறார்.

    செவாலியே விருது பெற்ற கமலஹாசனக்கு மத்திய அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தவும் வலியுறுத்தி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×