என் மலர்

    சினிமா

    இருதரப்பினர் சமரசம்: ‘பாகுபலி-2’ பட வழக்கு ஐகோர்ட்டில் முடித்து வைப்பு.
    X

    இருதரப்பினர் சமரசம்: ‘பாகுபலி-2’ பட வழக்கு ஐகோர்ட்டில் முடித்து வைப்பு.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ‘பாகுபலி-2’ படத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்று முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா டகுபதி உட்பட பலர் நடித்துள்ள ‘பகுபாலி-2’ என்ற திரைப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாக உள்ளது. பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படத்தை வெளியிட தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    சென்னை ஐகோர்ட்டில் ஏ.சி.இ. என்ற நிதி நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கில், ‘ஸ்ரீ கிரீன் புரொடக்சன் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன், ‘பாகுபலி-2’ திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட உரிமம் பெற்றுள்ளார். இவர், கடந்த 2016-ம் ஆண்டு ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் கடன் கேட்டார். இந்த தொகை பிரபுதேவா ஸ்டூடியோ நிறுவனத்தில் பெயரில் வழங்கப்பட்டது. இந்த கடன் தொகையுடன் ரூ.10 லட்சம் வட்டியுடன் சேர்த்து, ‘பாகுபலி-2’ படத்தை வெளியிடுவதற்கு முன்பாக தருவதாக சரவணன் கூறினார்.



    இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தமும் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த கடன் தொகையை ‘பாகுபலி-2’ படம் வெளியான பின்னர் தருவதாக சரவணன் கூறுகிறார். இது கடன் ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். மேலும், அவருக்கு கடனை திருப்பித் தரவேண்டும் என்ற எண்ணமும் இல்லை. எனவே, கடன் தொகையை வட்டியுடன் திருப்பித்தராமல் ‘பாகுபலி-2’ படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பாகுபலி-2’ படத்தை வெளியிட தடை விதிக்க நீதிபதி மறுத்து விட்டார். மேலும், இந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி எதிர் மனுதாரருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

    விசாரணையை 18-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர் இடையே கடன் தொடர்பான பிரச்சினையில் சுமூக முடிவு ஏற்பட்டதாக இருதரப்பு வக்கீல்களும் கூறினார்கள். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
    Next Story
    ×