என் மலர்

    சினிமா

    சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து
    X

    சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    `தானா சேர்ந்த கூட்டம்' படக்குழு சூர்யா ரசிகர்களுக்கு விரைவில் சிறப்பு விருந்தளிக்க திட்டமிட்டுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    `நானும் ரவுடி தான்' படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'. சூர்யா - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

    அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தமிழ் புத்தாண்டன்று வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், போஸ்டர் எதுவும் வெளியாகாததால், சூர்யா ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து போஸ்டர் வெளியாகாதது குறித்து படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.



    அதில், அவர் கூறியதாவது, `தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான வேலைகள் இன்னமும் முழுமையாக முடியாததால் போஸ்டரை தமிழ் புத்தாண்டன்று வெளியிட முடியவில்லை. எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள், போஸ்டரை விரைவில் வெளியிடுகிறேன் என்று விக்னேஷ் சிவன், சூர்யா ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார்.

    மறுபுறத்தில், இசையமைப்பாளர் அனிருத் அவரது டுவிட்டர் பக்கத்தில், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் அவர் பாடும் ஒரு பாடலின் சில வரிகளை பாடிக் காண்பித்துள்ளார். தமிழ் புத்தாண்டில் சூர்யா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இதனை வெளியிடுவதாகக் கூறிய அனிருத், இப்படத்தின் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×