என் மலர்

    சினிமா

    தயார் நிலையில் ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை படங்களின் 2-ம் பாகம்
    X

    தயார் நிலையில் ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை படங்களின் 2-ம் பாகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்களின் 2-ம் பாகம் தயாராக உள்ளதாக செல்வராகவன் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
    செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘காதல் கொண்டேன்’, ‘7 ஜி ரெயின்போ காலனி’ ஆகிய படங்கள் அவருடைய திறமையை வெளிப்படுத்திய படங்கள். அதேபோல், ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்கள் வணிக ரீதியாக தோல்வியடைந்த போதிலும், அந்த படங்கள் அனைவரும் ரசிக்கும்படியாகவும், அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற படமாக அமைந்தது.

    ‘இரண்டாம் உலகம்’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எந்த படமும் இயக்காமல் இருந்த செல்வராகவன், தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து சந்தானம் நடிப்பில் ‘மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், சிம்புவை வைத்து இவர் இயக்கிய ‘கான்’ படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.



    இவருடைய இயக்கத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் இரண்டாம் பாகத்திற்கான கதையை செல்வராகவன் எழுதி முடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. படங்கள் இயக்காமல் இரண்டு வருடங்களாக வீட்டில் இருந்த இருந்த சமயத்தில் இப்படத்தின் கதைகளை அவர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால், இப்போதைக்கு இந்த இரண்டு படங்களையும் இயக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது அவருக்கு வேறு பணிகள் இருப்பதால் இந்த இரண்டு படங்களையும் இயக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். இருந்தாலும் எதிர்காலத்தில் இப்படங்களின் இரண்டாம் பாகம் வெளிவரும் என அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம். 
    Next Story
    ×