என் மலர்

    சினிமா

    20 வருடங்களுக்குப் பிறகு முன்னணி நடிகருடன் மீண்டும் இணையும் பிரகாஷ் ராஜ்
    X

    20 வருடங்களுக்குப் பிறகு முன்னணி நடிகருடன் மீண்டும் இணையும் பிரகாஷ் ராஜ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    `இருவர்' படத்தில் இணைந்து நடித்த மோகன்லால், பிரகாஷ் ராஜ் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து மலையாள படம் ஒன்றில் நடிக்க உள்ளனர். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    மணிரத்னம் இயக்கத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் வெளியான படம் `இருவர்'. மோகன்லால், பிரகாஷ் ராஜ், நாசர், ஐஸ்வர்யா  ராய், தபு, கௌதமி உள்ளிட்ட பலரும் நடித்து அரசியல் பின்னணியில் உருவாகிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை  பெற்றது. 

    இந்நிலையில். மோகன்லால்-பிரகாஷ்ராஜ் இணைந்து மலையாளத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.  `ஒடியன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீகுமார் இயக்குகிறார். இப்படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக பிரகாஷ் ராஜ்  நடிக்க உள்ளார். 



    மஞ்சு வாரியர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இப்படத்திற்கு, எம்.ஜெயச்சந்திரன் இசையமைக்க உள்ளார். வருகிற  2018-ஆம் ஆண்டில் இப்படம் திரைக்கு வர உள்ளது.

    Next Story
    ×