என் மலர்

    சினிமா

    ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது: பிரகாஷ்ராஜ் பேட்டி
    X

    ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது: பிரகாஷ்ராஜ் பேட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழு பேட்டியை கீழே பார்ப்போம்.
    ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்று பிரகாஷ்ராஜ் கூறினார்.

    பிரகாஷ்ராஜ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் அழகாக அமைதியாக அறவழியில் போராட்டம் நடத்தினார்கள். இது அனைவரையும் மெய்சிலிர்க்க  வைத்தது. நாங்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தோம். ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியது  தேவையற்றது.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எல்லோருக்கும் பேசும் தைரியம் வந்துவிட்டது. யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கிறார்கள்,  பேசுகிறார்கள்.



    தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குபின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைவர் இல்லை. தமிழக அரசியல்  கேள்விக்குறியாக உள்ளது. இப்போது ஆட்சியும் கேள்விக்குறியாக உள்ளது. திடீர் என்று தலைவரை திணிக்கக் கூடாது, இவர்களுக்காக  மக்கள் ஓட்டு போடவில்லை. எம்.எல்.ஏ.க்.கள் ஆதரவு இருக்கிறது என்றாலும் இந்த எம்.எல்.ஏ.க்களையும் அந்த தலைவருக்காகத்தான்  தேர்வு செய்தார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஆனாலும் நம் நாட்டு சட்டப்படி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும். சட்டப்படி ஆட்சி நடத்துங்கள்.

    எந்த அரசாங்கம் இருந்தாலும் நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்துக்காக அவர்களை சந்தித்துப் பேசுவோம். அது எங்களின் உரிமை.

    நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து இருப்பதாக கூறுகிறார்கள். இந்த வி‌ஷயத்தில் ஆண்கள் நிறைய மாற வேண்டும்.



    திருட்டு விசிடி பிரச்சினையில் சி.டி. விற்பவர்களை பிடிப்பதில் பயன்இல்லை. மூலம் யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும்.

    திரை உலகில் இளைய ராஜா- எஸ்.பி.பி. மோதல் கவலை அளிக்கிறது. இருவரும் 40 ஆண்டு நண்பர்கள். இருவருக்கும் அறிவுரை  சொல்லக் கூடிய நிலையில் நாங்கள் இல்லை.

    இளையராஜா எடுத்தது நல்ல முடிவு. பெரிய கண் திறந்து இருக்கிறது. அவர் ஒரு படைப்பாளி. ஒரு பாடல் உருவாகும் போது வயலின்  எங்கே வரவேண்டும், புல்லாங்குழல் எங்கே வரவேண்டும் என ஒவ்வொரு இசைக்கும் எழுதிக் கொடுக்கிறார். அதன்படிதான் இசைக்  கலைஞர்கள் இசையை எழுப்புகிறார்கள். எனவே இதில் படைப்பாளி இசை அமைப்பாளர்தான்.

    அவர் அதற்கு சம்பளம் பெற்றாலும் ஒவ்வொரு முறையும் அதை பயன்படுத்தும் போது அதன் ராயல்டி பங்கு இசைஅமைப்பாளருக்கும்  போய்ச் சேர வேண்டும். அந்த உரிமையைத்தான் அவர் கேட்கிறார். கேட்பது அவரது உரிமை.

    தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மொழி, இன, பிரச்சினையை கிளப்பகூடாது, தமிழ் தயாரிப்பாளர் சங்க தேர்தல் என்பதால் அதில் மொழி  பாகுபாடு கிடையாது. தயாரிப்பாளர்களின் உரிமைக்காக செயல்படும் அமைப்பாகத்தான் இருக்கிறது.

    காவிரி பிரச்சினையின் போது பஸ் மீது கல்வீசி தாக்குவதோ, தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வாகனங்களை தீயிட்டு கொளுத்துவதோ  கூடாது என்று தெரிவித்தேன். விவசாயிகள் தண்ணீர் கேட்டு போராடத்தான் செய்கிறார்கள். அவர்கள் வன்முறையில் ஈடுபடுவது  கிடையாது. யாரோ வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.

    நடிகராக இருக்கும் விஷால் தயாரிப்பாளர் என்ற முறையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் அரசியல் பேசுவது  அவரது உரிமை, நடிகர் சங்கத்தில் அரசியல் கலப்பு இல்லாமல் செயல் படுகிறது. அதுபோல் தயாரிப்பாளர் சங்கம் செயல்பட வேண்டும்  தகுதி இருந்தால் அவருடன் மோதிப்பாருங்கள்.

    இவ்வாறு நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார்.



    தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் அணி சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இந்த நிலையில்  பிரகாஷ்ராஜ், விஷால் ஆகியோர் டெல்லி சென்று அங்கு 11 நாட்களாக போராடும் தமிழக விவசாயிகளை சந்தித்து ஆதரவு  தெரிவித்தனர்.

    அவர்களின் கோரிக்கைகளுக்காக 2 நாட்களாக டெல்லியில் தங்கி மத்திய மந்திரி நிதின்கட்காரி, அருண்ஜெட்லி ஆகியோரை சந்தித்து  பேசினார்கள்.

    டெல்லியில் இருவரும் நிருபர்களிடம் கூறுகையில், இது தமிழக விவசாயிகளின் போராட்டமாக கருதக்கூடாது. இந்திய விவசாயிகள்  பிரச்சினை. இதில் அரசியல் இல்லாமல் போராடுகிறார்கள். விவசாயிகளை தனியாக விட்டு விட முடியாது என்று தெரிவித்தனர்.
    Next Story
    ×