என் மலர்

    சினிமா

    `கடம்பன் படத்தில் சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த ஆர்யா, கேத்தரின் தெரசா
    X

    `கடம்பன்' படத்தில் சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த ஆர்யா, கேத்தரின் தெரசா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    `கடம்பன்' படத்தில் சண்டை காட்சிகளில் ஆர்யா மற்றும் கேத்தரின் தெரசா டூப் இல்லாமல் நடித்ததாக படத்தின் இயக்குநர் ராகவா தெரிவித்துள்ளார். அவர் அளித்த முழு தகவலை கீழே பார்ப்போம்.
    ஆர்யா, கேத்தரின் தெரசா நாயகன் நாயகியாக நடிக்கும் படம் ‘கடம்பன்’. ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ், ஆர்யாவின்  பீப்பிள் பட நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருப்பவர் ராகவா.

    படம் தயாரான விதம் பற்றி அவரிடம் கேட்ட போது...

    ‘கடம்பன்’ படத்தின் கதை மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது. வனம் சார்ந்த படம். இயற்கை வளத்தை  அழித்தால் பாதிக்கப்படுவது நாம் தான் என்பது இந்த படத்தின் கரு.



    வனக்கடவுள் முருகனின் மற்றொரு பெயர் கடம்பன். இந்த படத்தில் நாயகனாக நடிக்க தயாரான ஆர்யாவிடம், கட்டுமஸ்தான  உடல் அமைப்பு கொண்ட ஒரு அனுமார் படத்தை காட்டி இது போல் உங்கள் உடல் அமைப்பை மாற்ற வேண்டும் என்றேன்.

    அவர் இரண்டே மாதத்தில் கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் அமைப்பை மாற்றினார். இது அவருக்கு ஒரு ஹைலட்  படமாக இருக்கும். காலில் செருப்பு அணியாமல் நடித்தார்.

    நாயகனும், நாயகியும் சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறார்கள். திலீப்புராயன் சிறப்பாக பயிற்சி அளித்தார்.

    முழுக்க முழுக்க வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்பு கருவிகளை ஒத்தையடி  பாதையில் சுமந்து சென்றோம். கிளைமாக்ஸ் காட்சி பாங்காங்கில் உள்ள சியாங்கை என்ற இடத்தில் படமானது. இதில் 60  யானைகள் இடம் பெற்றுள்ளன. ‘அவ்வையார்’ படம் வெளியாகி 65 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே காட்சியில் இத்தனை யானைகள்  இடம் பெறுவது இந்த படத்தில் தான். ‘கடம்பன்’ நிச்சயம் அதிகம் பேசப்படும் படமாக இருக்கும்” என்றார்.
    Next Story
    ×