என் மலர்

    சினிமா

    டோரா படத்திற்கு தணிக்கை குழு அளித்த சான்றிதழால் படக்குழுவினர் அதிர்ச்சி
    X

    டோரா படத்திற்கு தணிக்கை குழு அளித்த சான்றிதழால் படக்குழுவினர் அதிர்ச்சி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நயன்தாரா நடித்துள்ள ‘டோரா’ படத்திற்கு தணிக்கை குழு அளித்துள்ள சான்றிதழ் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    நயன்தாரா நடிப்பில் திகில் படமாக உருவாகியிருக்கும் படம் ‘டோரா’. இப்படத்தை தாஸ் ராமசாமி என்பவர் இயக்கியுள்ளார். தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு விவேக் சிவா மெர்வின் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. அதற்கு முன்னதாக படத்திற்கு சான்றிதழ் பெருவதற்காக இப்படத்தை தணிக்கை குழுவினருக்கு பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் திகிலூட்டும்படியான அதிக காட்சிகள் இருப்பதால் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.



    தணிக்கை குழுவினரின் இந்த முடிவு படக்குழுவினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழாவது வாங்க முடியுமா? என்ற முயற்சியில் படக்குழுவினர் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரிலீஸ் தேதியும் நெருங்குவதால், அதற்குள் படக்குழுவினரின் முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
    Next Story
    ×