என் மலர்

    சினிமா

    தியேட்டர்களில் இனி கூட்டம் அலை மோதும்: ஆர்.கே.
    X

    தியேட்டர்களில் இனி கூட்டம் அலை மோதும்: ஆர்.கே.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குறைந்த விலையில் சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்ததன் மூலம் தியேட்டர்களில் இனி கூட்டம் அலை மோதும் என்று ஆர்.கே. கூறியுள்ளார். அது என்ன திட்டம் என்பதை பார்ப்போம்...
    ஆர்.கே., நீத்து சந்திரா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’. சாஜிகைலாஸ் இயக்கி உள்ள இதில் நாசர், இனியா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தமன் இசை அமைத்துள்ளார்.

    இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஏராளமான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் பேசிய நாசர்... “நான் 500 படங்களை கடக்கப் போகிறேன்.

    இன்று தயாரிப்பாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவமானப்படுகிறார்கள். மிரட்டப்படுகிறார்கள். இதற்கு ஆர்.கே.யின் குறைந்த விலையில் டிக்கெட் வழங்கும் திட்டம் ஒரு தீர்வாக இருக்கும். சினிமாவை காக்க வேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கிறது” என்றார்.

    ஆர்.கே. பேசும்போது....

    “அதிக விலைக்கு சினிமா டிக்கெட் விற்கப்படுவதால் பலர் குடும்பத்துடன் சினிமாவுக்கு செல்வதில்லை. எனவே குறைந்த விலையில் டிக்கெட்டுகளை வினியோகிக்க ‘ஹிட்பாக்ஸ்’ திட்டம் கொண்டு வந்திருக்கிறேன். இதற்காக ஆயிரம் வினியோகஸ்தர்களை உருவாக்கி இருக்கிறேன்.

    இந்த ‘ஹிட்பாக்ஸ்’ திட்டம் மூலம் 8 கோடி பேர் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பார்கள். 4 வாரம் அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் ஓடும். தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும். இந்த திட்டத்தின்படி ரூ.300 மதிப்புள்ள டிக்கெட்டை ரூ.100க்கு கொடுக்கிறோம். 3 டிக்கெட் வாங்கினால் 2 பேரை இலவசமாக கூட்டி வரலாம். 1 லட்சம் டிக்கெட் விற்றால் அவர்கள் 5 லட்சம் சம்பாதிப்பார்கள்” என்று கூறினார்.

    நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் கேயார், ஏ.எம்.ரத்தினம், ஏ.எல்.அழகப்பன், கதிரேசன் உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள்.
    Next Story
    ×