என் மலர்

    சினிமா

    24 மணி நேரத்தில் 5 கோடி பார்வையாளர்கள்: சாதனை படைத்த பாகுபலி-2 டிரைலர்
    X

    24 மணி நேரத்தில் 5 கோடி பார்வையாளர்கள்: சாதனை படைத்த பாகுபலி-2 டிரைலர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ‘பாகுபலி 2’ டிரைலர் 24 மணி நேரத்தில் 5 கோடி பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    ‘பாகுபலி-2’ டிரைலர் நேற்று இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. இது ‘யுடியூப்’பில் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்த டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் ஆகிய 4 மொழிகளையும் சேர்த்து 5 கோடி பேர் கண்டுகளித்துள்ளனர்.

    ‘பாகுபலி-2’ டிரைலர் 4 மொழிகளிலும் லட்சக்கணக்கான லைக்குகளையும், ஆயிரத்துக்கும் அதிகமான கமெண்டுகளும் பதிவாகியுள்ளது. இது இந்திய திரை உலகின் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. ஏற்கெனவே, இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ‘Raees' படம்தான் 24 மணி நேரத்தில் 2 கோடிக்கும் அதிகமான பேர் கண்டுகளித்தது சாதனையாக இருந்தது.



    அந்த சாதனையை தற்போது ‘பாகுபலி-2’ முறியடித்துள்ளது. தொடர்ந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இது பல கோடியை கடக்கும் என்று எதிர்பர்க்கப்படுகிறது. இப்படத்தை எஸ்.ராஜமௌலி இயக்கியுள்ளார். பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
    Next Story
    ×