என் மலர்

    சினிமா

    வங்கிகளில் பண பரிவர்த்தனை குளறுபடி: ஆரி சொல்லும் புதிய யோசனை
    X

    வங்கிகளில் பண பரிவர்த்தனை குளறுபடி: ஆரி சொல்லும் புதிய யோசனை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வங்கிகளில் பணபரிவர்த்தனைகளுக்கு இருக்கும் குளறுபடியை தவிர்க்க நடிகர் ஆரி புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    வங்கிக் கிளைகளில் ஒரு மாதத்தில் 4 இலவச ரொக்கப் பணப் பரிவர்த்தனைகளுக்குப் பிறகு, ஒவ்வொரு டெபாசிட்டுக்கும், திரும்ப எடுக்கும் தொகைக்கும் ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று சில தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. மேலும், அரசு வங்கிகளிலும் குறிப்பிட்ட தொகையை இருப்பாக வைத்துக் கொள்ளவேண்டும் என்றும், அந்த இருப்பு தொகை குறைந்துவிட்டால், குறிப்பிட்ட தொகை அபாரதாமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கிகளின் இந்த குளறுபடிகளினால் சாமான்ய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வாக நடிகர் ஆரி மாற்றுவழியை மக்களிடத்தில் பரப்பி வருகிறார். வங்கிகளுக்கு பதிலாக அஞ்சலகங்களில் அனைத்துவகை பயன்பாடுகளும் கொண்ட கணக்கை துவக்கும் மாற்று வழியை மக்களிடையே வலியுறுத்தியிருக்கிறார். வலியுறுத்தியது மட்டுமில்லாமல் அஞ்சலகத்தில் தனது பெயரில் கணக்கு ஒன்றையும் துவக்கியுள்ளார்.



    இதன்மூலம், ரூ.1000-க்கு மேல் வங்கிகளில் கையிருப்பு வைத்திருக்கவேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் நிலையில், அஞ்சலங்களில் ரூ.100 கொடுத்து, நமது பெயரில் கணக்கு ஒன்றை தொடங்கிவிடலாம். கையிருப்பு ரூ.50 இருந்தாலே போதுமானது. வங்கியில் என்னென்ன சேவைகள் இருக்கிறதோ? அது அத்தனையும் அஞ்சலக சேவைகளிலும் வருகிறது.

    வங்கிகளைப் போலவே பாஸ்புக், ஏடிஎம் கார்டும் கொடுத்துவிடுகிறார்கள். இந்த ஏடிஎம்-ஐ வைத்து அனைத்து வங்களின் ஏடிஎம்-களிலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளாலாம். இதற்காக எந்த கட்டணமும் கிடையாது.



    இதுகுறித்து ஆரி கூறும்போது, அஞ்சலகங்களில் 50 ரூபாய் கையிருப்பில் அனைத்து வகை பயன்பாடுகளும் கொண்ட கணக்கை துவக்கும் மாற்று வழியை மக்களிடத்தில் பரப்புவதில் ஒரு தமிழனாய் இந்த விழிப்புணர்வு புரட்சியை மாணவச் சகோதர சகோதரிகளுடன் இணைந்து ஆரம்பித்ததில் நான் பெருமை கொள்கிறேன்.

    இந்தச் செய்தியை விழிப்புணர்வை மக்களிடம் பரப்புவோம். நாம் மாறினால் மாற்றங்கள் உருவாகும். மக்களிடமும் மாற்றத்தை உருவாக்குவோம். தமிழனாய் நான் உருவாக்கிய இந்த மாற்றம் இந்தியா முழுவதும் உருவாக வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்.

    இதற்கு ஒத்துழைப்பு தந்த மாணவர்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் நண்பர்களுக்கும், அனைத்து தொலைக்காட்சிளுக்கும், இணையதள நண்பர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×