சினிமா
திடீர் நிச்சயதார்த்தம் நடந்தது ஏன்? பாவனா விளக்கம்
தனக்கு ஏன் திடீர் நிச்சயதார்த்தம் நடந்தது என்பது குறித்து நடிகை பாவனா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதை கீழே பார்ப்போம்.
பாவனாவுக்கும் அவரது காதலரும் படத் தயாரிப்பாளருமான நவீனுக்கும் திடீர் என்று நிச்சயதார்த்தம் நடந்தது. அது ஏன் என்ற கேள்விக்கு பாவனா பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நவீன் மற்றும் அவரது குடும்பத்தார் பெண் பார்க்கும் சம்பிரதாயத்துக்காக எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். இரு வீட்டுக்காரர்களும் பேசிக் கொண்டிருந்தபோது மோதிரம் மாற்றிக் கொள்ளலாமே என்ற பேச்சு கிளம்பியது.
அதனால் தான் திடீர் என்று நிச்சயதார்த்தம் நடந்து விட்டது. உடனே இதற்கு ஏற்பாடு செய்ததால் நெருங்கிய நண்பர்களுக்குகூட தெரிவிக்க முடியவில்லை. திருமணம் நடக்கும் வரை நிச்சயதார்த்தம் பற்றி யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பினேன். ஆனால் தெரிந்து விட்டது” என்று கூறினார்.
பாவனா தமிழ் மற்றும் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில், ‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ‘தீபாவளி’, ‘அசல்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளனர்.
அதனால் தான் திடீர் என்று நிச்சயதார்த்தம் நடந்து விட்டது. உடனே இதற்கு ஏற்பாடு செய்ததால் நெருங்கிய நண்பர்களுக்குகூட தெரிவிக்க முடியவில்லை. திருமணம் நடக்கும் வரை நிச்சயதார்த்தம் பற்றி யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பினேன். ஆனால் தெரிந்து விட்டது” என்று கூறினார்.
பாவனா தமிழ் மற்றும் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில், ‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ‘தீபாவளி’, ‘அசல்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளனர்.
Next Story