என் மலர்

    சினிமா

    `விஐபி-2 அப்டேட்: படப்பிடிப்பில் இருந்து கிளம்பிய கஜோல்
    X

    `விஐபி-2' அப்டேட்: படப்பிடிப்பில் இருந்து கிளம்பிய கஜோல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    `விஐபி-2' படத்தில் தன்னுடைய காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக தனது இன்ஸ்டோகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்தமுழுதகவலை கீழே பார்ப்போம்.
    தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும்  வெற்றி பெற்ற படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. இப்படத்தை இயக்குநர் வேல்ராஜ் இயக்கியிருந்தார்.

    இந்நிலையில், சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இப்படத்தின் 2-வது பாகம் வேகமாக உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரு  மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தனுஷ் கதை, வசனம் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.



    இப்படத்திலும், தனுஷ் ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். மேலும் கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், விவேக்,  ரிஷிகேஷ், மோனல் கஜ்ஜார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

    `விஐபி 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நடிகை கஜோல் தனது இன்ஸ்டோகிராம் பக்கத்தில் "விஐபி-2  படத்தில் தனது காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். தனது இறுதிகட்ட படப்பிடிப்பை இன்று முடித்து விட்டேன்,  படக்குழுவை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்றும் கூறியுள்ளார்.



    42 வயதாகும் கஜோல், தமிழில் கடைசியாக 20 வருடங்களுக்கு முன் வெளியான 'மின்சார கனவு' படத்தில் கதாநாயகியாக  நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×