சினிமா
விவசாயிகளுக்கு உதவ புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் விவசாயிகளுக்கு உதவுவதற்காக புதிய அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
வறட்சி காரணமாக பல்வேறு விவசாயிகள் உயிர் இழந்துள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து வறுமையால் வாடும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவ நடிகர் ராகவா லாரன்ஸ், “விவசாயிகளின் உயிர் காப்போம் சொல்லாதே செய்” என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கி உள்ளார்.
இதன் மூலம் நிதி திரட்டி வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு உதவி செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக ராகவா லாரன்ஸ் இன்று ரூ.1 கோடி நிதி வழங்கினார். மற்றவர்களிடமும் நிதி திரட்டி அதை விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளார்.
சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில், நாகை மாவட்டம் ஆயக்குடியில் இறந்த விவசாயி கண்ணதாசன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி வழங்கினார். இதுபோல் மற்ற குடும்பங்களுக்கு உதவி வழங்கப்படும் என்று ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.
நிகழ்ச்சியில் ஆர்.பி.சௌத்ரி, பி.வாசு, அம்மா கிரியேன்ஸ் சிவா பலர் கலந்து கொண்டனர். இந்த அமைப்புக்கு அவர்களும் நன்கொடை வழங்கினார்கள்.
இதன் மூலம் நிதி திரட்டி வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு உதவி செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக ராகவா லாரன்ஸ் இன்று ரூ.1 கோடி நிதி வழங்கினார். மற்றவர்களிடமும் நிதி திரட்டி அதை விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளார்.
சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில், நாகை மாவட்டம் ஆயக்குடியில் இறந்த விவசாயி கண்ணதாசன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி வழங்கினார். இதுபோல் மற்ற குடும்பங்களுக்கு உதவி வழங்கப்படும் என்று ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.
நிகழ்ச்சியில் ஆர்.பி.சௌத்ரி, பி.வாசு, அம்மா கிரியேன்ஸ் சிவா பலர் கலந்து கொண்டனர். இந்த அமைப்புக்கு அவர்களும் நன்கொடை வழங்கினார்கள்.
Next Story