என் மலர்

    சினிமா

    நடிகை ரம்யா நம்பீசன் வீட்டில் தஞ்சமடைந்துள்ள பாவனா மெல்ல மீண்டு வருவதாக தகவல்
    X

    நடிகை ரம்யா நம்பீசன் வீட்டில் தஞ்சமடைந்துள்ள பாவனா மெல்ல மீண்டு வருவதாக தகவல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகை ரம்யா நம்பீசன் வீட்டில் தஞ்சமடைந்துள்ள பாவனா, குற்றவாளிகள் கைதானதால் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்பி வருவதாக ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார். அவரது முழு பேட்டியை கீழே பார்ப்போம்.
    ஓடும் காரில் பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை பாவனா, இச்சம்பவம் பற்றி டைரக்டர் லாலிடம் தகவல் தெரிவித்தார்.

    அவர்தான் போலீசாருக்கு தகவல் கொடுத்ததோடு, பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டினையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.  அவர் கொடுத்த தகவலின் பேரில்தான் பாவனா கடத்தலில் சுனில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பது  தெரியவந்தது.



    நேற்று முன்தினம் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.

    குற்றவாளிகள் கைதான தகவல் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து பாவனாவின் நெருங்கிய தோழியும், நடிகையுமான  ரம்யா நம்பீசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-



    நடிகை பாவனாவுக்கு ஏற்பட்ட கொடுமையை பொறுத்துக் கொள்ள முடியாது. சம்பவம் வெளியுலகுக்கு தெரியவந்த பின்னர்,  அவர் என்னோடு தான் தங்கி இருந்தார். இப்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் என்பதை அறிந்த பின்னர் அவர், மெல்ல  மெல்ல தேறி வருகிறார்.

    பாதிப்பில் இருந்து முழுமையாக அவர் மீண்டுவர வேண்டும். அவருக்கு மொத்த திரையுலகமும் ஆதரவாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×