என் மலர்

    சினிமா

    நடிகை பாவனா கடத்தல்: முக்கிய குற்றவாளி சுனில் நீதிமன்றத்தில் சரண்
    X

    நடிகை பாவனா கடத்தல்: முக்கிய குற்றவாளி சுனில் நீதிமன்றத்தில் சரண்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சுனில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    நடிகை பாவனா கேரளாவில் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள  நிலையில், முக்கிய குற்றவாளியான சுனில் என்ற பல்சர் சுனில் தலைமறைவாக இருந்தார். அவர் இன்று எர்ணாகுளம்  கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    பிரபல நடிகை பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி  நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.



    கடந்த 17-ந்தேதி இவர் திருச்சூரில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு விட்டு கார் மூலம் கொச்சி நோக்கி சென்று  கொண்டிருந்தார். அந்த காரை டிரைவர் மார்ட்டின் என்பவர் ஓட்டினார். பாவனாவின் காரை ஒரு கும்பல் வழிமறித்தது. அந்த  கும்பலை சேர்ந்த பிரபல ரவுடி சுனில் உள்பட 5 பேர் காரில் ஏறி நடிகை பாவனாவிடம் பாலியல் கொடுமை செய்து அதை  செல்போனிலும் படம்பிடித்தனர்.

    நடிகை பாவனா டைரக்டர் லால் உதவியுடன் இதை போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார். போலீசார்  அதிரடி நடவடிக்கை எடுத்து இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக டிரைவர் மார்ட்டினை கைது செய்தனர். மேலும்  கோவையில் பதுங்கி இருந்த சுனிலின் கூட்டாளிகள் 2 பேரை கைது செய்தனர்.



    முக்கிய குற்றவாளியான சுனில் அவரது கூட்டாளிகள் மணிகண்டன், விஜேஷ் ஆகிய 3 பேரை பிடிக்க போலீசார் தீவிர  வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், சுனில் கொச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
    Next Story
    ×