என் மலர்

    சினிமா

    தமிழர்களை ‘பொறுக்கி’ என்று சொன்னதற்கு மக்கள் பதில் அளிப்பர்: சுப்பிரமணியசாமிக்கு கமல் பதில்
    X

    தமிழர்களை ‘பொறுக்கி’ என்று சொன்னதற்கு மக்கள் பதில் அளிப்பர்: சுப்பிரமணியசாமிக்கு கமல் பதில்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    எலும்பில்லாத, பகட்டான முட்டாள் என்று கூறுவதா? சுப்பிரமணியசாமிக்கு கமல்ஹாசன் பதில் தெரிவித்துள்ளார். இருவரது கருத்து பரிமாற்றத்தை கீழே பார்க்கலாம்.
    தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

    இதுபற்றி கருத்து தெரிவித்த பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, ‘தமிழ் பொறுக்கிகள்’ என்று கூறினார்.

    இதற்கு கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறினார்.

    உடனே சுப்பிரமணியசாமி டுவிட்டரில் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து கருத்தை வெளியிட்டார்.

    அதற்கு கமல்ஹாசன் டுவிட்டரில் பதில் தெரிவித்தார். தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து கமல்ஹாசன் கருத்து  தெரிவித்து வருகிறார்.

    இதை எதிர்த்தும் சுப்பிரமணியசாமி டுவிட்டரில் திட்டி கருத்து தெரிவித்து வருகிறார். இருவருக்கும் டுவிட்டரில் வார்த்தை  மோதல் நீடித்து வருகிறது.



    இந்த நிலையில் சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள கருத்தில், ‘எலும்பில்லாத, பகட்டான முட்டாள்  கமல்ஹாசனை எதிர்ப்பேன்’ என்று கூறி இருந்தார். இதற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்து உள்ளார்.

    அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இதுகுறித்து விவாதிக்கக் கூடிய எலும்பு என்னிடம் இருக்கிறது. அது போதும். தமிழர்களை  பொறுக்கி என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

    இதற்காக நான் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை. மக்கள் தெரிவிப்பார்கள். என் பதிலில் முரட்டுத்தனம் இருக்காது.

    மோசமான அரசியல் பரிமாற்றங்களில் என்னை விட அவருக்கு அனுபவம் அதிகம். அவருக்கு வேண்டுமானால் உணவில்  எலும்பு இல்லாதது பிடிக்கலாம். எனக்கு அப்படி அல்ல. உங்கள் உணவை ரசித்து சாப்பிடுங்கள் சார் என்று கிண்டல் செய்யும்  வகையில் பதில் கூறியுள்ளார்.

    கமல்ஹாசனை விமர்சித்ததற்கு திரையுலக பிரபலங்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இதையடுத்து சுப்பிரமணியசாமி டுவிட்டரில் இருந்து தனது கருத்தை நீக்கி உள்ளார்.
    Next Story
    ×