சினிமா
பளுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் விளையாட உள்ள நடிகை ரம்யா
தமிழ்நாடு மாநில பளு தூக்கும் போட்டியில், வெண்கல பதக்கத்தை வென்ற ரம்யா இந்தியாவிற்காக பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். இதுகுறித்த முழு தகவலை கீழே பார்ப்போம்.
ஐந்தாவது தமிழ்நாடு மாநில பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க நடிகை ரம்யா தகுதி பெற்றுள்ளார். தொகுப்பாளினி, நடிகை என்ற அடையாளங்கள் ரம்யாவிற்கு ஒருபுறம் இருக்க, தற்போது பளு தூக்கும் போட்டியிலும் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கிறார்.
இதுகுறித்து ரம்யா கூறியதாவது,
பல முன்னணி வீர்கள் பங்கேற்ற இந்த பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அத்தகைய வீரர்களோடு போட்டியில் கலந்து கொள்வதன் மூலம், நம்முடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். 27.5 கிலோ பளு தூக்கும் பிரிவில் ஆரம்பித்து, 32.5 கிலோ பிரிவிற்கு முன்னேறி, தற்போது 35 கிலோ பிரிவில் பங்கேற்றுள்ளேன்.
போட்டி சற்று கடினமாக இருந்தாலும், என்னுடைய விடா முயற்சியால் தற்போது மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறினார்.
தன்னுடைய நாட்டிற்காக விளையாடுவதற்காக, தான் கடினமான பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும் ரம்யா கூறினார்.
இதுகுறித்து ரம்யா கூறியதாவது,
பல முன்னணி வீர்கள் பங்கேற்ற இந்த பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அத்தகைய வீரர்களோடு போட்டியில் கலந்து கொள்வதன் மூலம், நம்முடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். 27.5 கிலோ பளு தூக்கும் பிரிவில் ஆரம்பித்து, 32.5 கிலோ பிரிவிற்கு முன்னேறி, தற்போது 35 கிலோ பிரிவில் பங்கேற்றுள்ளேன்.
போட்டி சற்று கடினமாக இருந்தாலும், என்னுடைய விடா முயற்சியால் தற்போது மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறினார்.
தன்னுடைய நாட்டிற்காக விளையாடுவதற்காக, தான் கடினமான பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும் ரம்யா கூறினார்.
Next Story