சினிமா
பெண் இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?
சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் பெண் இயக்குநர் ஒருவருடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அந்த இயக்குநர் யார் என்பதை கீழே பார்ப்போம்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக மாறியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். ரஜினி நடிப்பில் கடந்த 1987-ஆம் ஆண்டு வெளியான `வேலைக்காரன்' படத்தலைப்பை மோகன் ராஜா இப்படத்திற்காக கைப்பற்றியுள்ளார். சிவகார்த்திகேயன் பிறந்தநாளான பிப்ரவரி 17-ஆம் தேதி அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இப்படத்தின் தலைப்பு படக்குழு வெளியிட்டது.
சூப்பர்ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் தனது படத்திற்கு ரஜினியின் படத்தலைப்பபை கைப்பற்றியுள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்' படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இப்படத்திற்கு பிறகு, பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுடன் இணைந்து நடிக்க உள்ளார். அதே நேரத்தில் `இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிகுமார் இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.
அதனைத்தொடர்ந்து, `இறுதிச்சுற்று' இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக சிவகார்த்திகேயன்-இயக்குநர் சுதா இடையே நடத்தப்பட்ட பேச்சுவாரத்தையில் இருவரும் இணைய உள்ளது உறுதியாகியுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர்ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் தனது படத்திற்கு ரஜினியின் படத்தலைப்பபை கைப்பற்றியுள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்' படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இப்படத்திற்கு பிறகு, பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுடன் இணைந்து நடிக்க உள்ளார். அதே நேரத்தில் `இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிகுமார் இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.
அதனைத்தொடர்ந்து, `இறுதிச்சுற்று' இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக சிவகார்த்திகேயன்-இயக்குநர் சுதா இடையே நடத்தப்பட்ட பேச்சுவாரத்தையில் இருவரும் இணைய உள்ளது உறுதியாகியுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story