என் மலர்

    சினிமா

    தமிழக அரசியல் திருப்பங்கள் குறித்து நடிகர்களின் கருத்துக்கள்
    X

    தமிழக அரசியல் திருப்பங்கள் குறித்து நடிகர்களின் கருத்துக்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழக அரசியல் திருப்பங்கள் குறித்து நடிகர் கமல்ஹாசன், டைரக்டர் பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கருத்துகள் வெளியிட்டு உள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    நடிகர் கமல்ஹாசன் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார். ஆட்சி அமைக்க நடக்கும் போட்டிகள், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு ஆகியவைபற்றி கருத்துகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்.

    அவரது சமீபத்திய டுவிட்டர் பதிவுகள் வருமாறு:-

    “திருடன் எனக்கூவி ஜனக்கூட்டம் துரத்தையிலே குதிபிடறிபட அவன் ஓடவல்லோ வேண்டும். நின்று நிதானமாய் கூப்பிட்டது போலிருக்கிறது? என்றால் ஜனமாவது நாயகமாவது...”

    “107 செயற்கை உறுப்பினரை ஏவியவரை விட 104 செயற்கை கோள்களை ஏவியவரே போற்றுதலுக்குரியவர். வாழிய செந்தமிழ், வாழிய நற்றமிழ், வாழிய பாரத மணித்திருநாடு”

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    நடிகரும் டைரக்டருமான பாக்யராஜ் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு வேண்டுகோள் விடுத்து கூறியிருப்பதாவது:-

    “சீட்டு கொடுத்தவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைக்கும் நீ, அந்த சீட்டை எம்.எல்.ஏ. பதவியாக மாற்றிய ஓட்டு போட்ட மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்ககூடாதா?”

    இவ்வாறு பாக்யராஜ் கூறியுள்ளார்.

    நடிகர் சித்தார்த் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    “நமது நாட்டில் பல அரசியல்வாதிகள் நூறுகோடி, ஆயிரம் கோடி என்று வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருக்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே ஊழல் செய்ததற்கான விலையை கொடுக்கிறார்கள். ஊழலுக்கு எதிராக நம்மால் சண்டை போட முடியும். ஊழலற்ற நிர்வாகம் வேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்தி கேட்க வேண்டும். நீங்கள் மாற்றமாக இருப்பதற்கு உறுதி எடுங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    நடிகர் மாதவன், ”நம்பிக்கையையும் பழைய இயல்பு வாழ்க்கையையும் கொண்டு வருவதற்கான நேரம் இது. தமிழக அரசு மீதுள்ள நம்பிக்கையை மீட்பதற்கு உறுதி எடுத்துக்கொள்ள வேண்டிய நேரமாகவும் இது இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

    நடிகை ஸ்ரீபிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அடுத்த 15 நாட்கள் தங்கப்போகும் அடுத்த ஹாலிடே ஸ்பாட் எங்கு இருக்கிறதோ?.. தேசிய செய்தி சேனல்கள் தமிழக பிரச்சினை முடிந்துவிட்டதாக தெரிவித்து வருகின்றன. பிரச்சினையே இப்போதுதான் ஆரம்பிக்கிறது என்பது அவற்றுக்கு தெரியவில்லை. உங்களுக்கு என்ன வேண்டும் என்று எம்.எல்.ஏக்களிடம் மக்கள் கேட்கவேண்டும்.

    இவ்வாறு ஸ்ரீபிரியா கூறியுள்ளார்.
    Next Story
    ×