என் மலர்

    சினிமா

    சிங்கத்தின் வேட்டை தொடரும்: `சி4 வரும் என ஹரி பேட்டி
    X

    சிங்கத்தின் வேட்டை தொடரும்: `சி4' வரும் என ஹரி பேட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    `சி3' படத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கத்தின் அடுத்த பாகமாக `சி4' வரும் என இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார். அவரது முழு பேட்டியை கீழே பார்க்கலாம்.
    சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘சி3’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. `சிங்கம்', `சிங்கம் 2'  படத்தின் அடுத்த பாகமாக உருவாக்கியுள்ள `சி3' படத்தை ஹரி இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யா - அனுஷ்கா ஷெட்டி,  ஸ்ருதிஹாசன், விவேக், சூரி, ராதாரவி, தாகூர் அனூப் சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் படம் ரிலீசான 6 நாட்களிலேயே 100 கோடியை வசூலித்து  புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது. சூர்யா நடிப்பில் குறைந்த நாட்களில் 100 கோடி வசூலை குவித்துள்ளது.

    `சி3' படம் வெற்றியையடுத்து இயக்குநர் ஹரிக்கு,  நடிகர் சூர்யா டொயோடா ஃபார்டியூனர் காரை பரிசளித்துள்ளார்.

    இந்நிலையில், இயக்குநர் ஹரி அளித்த பேட்டியில் சூர்யாவுடன் இணைந்து `சிங்கம்' படத்தின் நான்காவது பாகத்தை எடுக்க  உள்ளதாக கூறினார். சிங்கத்தின் வேட்டை தொடரும் என்றும் ஹரி குறிப்பிட்டுள்ளார்.

    ஹரி அடுத்ததாக விக்ரமை இயக்க உள்ளார். `சாமி' படத்தின் அடுத்த பாகமாக `சாமி 2' படத்தை இயக்க உள்ளது  குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் சிங்கம் படத்தைப் போன்று வேறொரு கதைக்களத்தில் சூர்யாவுடன் இணையவுள்ள ஹரி, அதன்பின்னர் `சி4' படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×