சினிமா
ஜல்லிக்கட்டு வெற்றி விழா கொண்டாட ராகவா லாரன்ஸ் அழைப்பு
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெற்றி பெற்றதையடுத்து, போராட்டத்தில் பங்கேற்றவர்களை வெற்றி விழா கொண்டாட ராகவா லாரன்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
நடிகர் ராகவாலாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு தடையை நீக்கியதை அடுத்து, அந்த சந்தோசத்தை வெற்றி விழாவாக மாணவர்கள், இளைஞர்களுடன் கொண்டாட எல்லோருக்கும் ஆசை தான்.
அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிகட்டை நேரில் பார்க்க ஊர் மக்களின் அழைப்பை ஏற்று, மெரினாவில் கூடிய மாணவர்கள் இளைஞர்கள் 300 பேருடன் செல்வதாக முடிவு செய்தோம்.
பல வருடங்களுக்கு பிறகு நடக்கும் திருவிழா என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நாங்களே 40 பேராக குறைத்துக் கொண்டு அலங்காநல்லூர் சென்றோம்.
அலங்காநல்லூரில் இடப் பற்றாக்குறை காரணமாக என்னை மட்டும் அனுமதித்தனர் மற்றவர்களை பிறகு அனுப்புகிறோம் என்று கூறியவர்கள் அனுமதிக்கவில்லை. இதற்கு ஊர் மக்கள் மீது எந்த தவறும் இல்லை. ஊர்மக்களின் அளவு கடந்த அன்பிற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.
இம்மாபெரும் ஜல்லிகட்டு நிகழ்ச்சியை காண முடியவில்லை என்று பல மாணவர்களும் இளைஞர்களும் வருத்தப்பட்டார்கள். கண்கலங்கியும் விட்டார்கள். அதனால் நானும் அவர்களுடன் இணைந்து அங்கிருந்து சென்று விட்டேன்.
மாணவர்களும், இளைஞர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர்களது வருத்தத்தை போக்க இச்ஜல்லிகட்டு வெற்றியை வரும் பிப்ரவரி 18-ம் நாள் அன்று கொண்டாடலாம் என்று கூறினேன் அவர்களும் சம்மதித்தனர். அப்போது அவர்கள் முகம் மெரினாவில் எழுந்த அலைபேசியின் வெளிச் சத்தைபோல் ஒளிர்ந்தது.
அதனால் இத்திருநாளை வெற்றி விழாவாக எல்லோரும் இணைந்து கொண்டாடுவோம் என நாம் முடிவெடுப்போம்.
நமது சந்தோசக்களம் மெரினாதான் என்றாலும் இன்றைய சூழலில் மெரினா சரியான இடமாக இருக்காது என்பதாலும் மாணவர்கள், இளைஞர்களுடன் கேக் வெட்டி ஏதாவது ஒரு இடத்தில் ஒன்று கூடி கொண்டாட உள்ளோம்.
மற்ற அனைவரையும் இணைப்பது என்பது சிரமம் என்பதால் உலகத்தமிழர்கள் அனைவரும் இருந்த இடத்திலேயே கொண்டாடுங்கள்.
கூலித் தொழிலாளி முதல் தகவல் தொழில்நுட்ப நண்பர்கள் என ஜல்லிகட்டுக்காக குரலெழுப்பிய அனைவரும் இதை வெற்றியாக கொண்டாடுவோம்.
நினைத்ததை சாதித்தோம், சாதித்ததை வரலாறாக மாற்ற கொண்டாடுவோம்.
வருகிற 18-ந்தேதி மாலை 7 மணி முதல் 7.15 மணி வரை யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் உலகத்தமிழர்கள் அனைவரும் மொட்டை மாடியிலோ அல்லது வீட்டிற்கு வெளியிலோ, உங்கள் அலை பேசியில் டார்ச் அடித்தோ அல்லது மெழுகுவர்த்தி ஏந்தியோ அமைதியாக கொண்டாடுவோம்.
மெரினாவில் பிரகாசித்த வெளிச்சம் மீண்டும் வரும் பிப்ரவரி 18-ஆம் நாள் அன்று மாலை 7 மணி முதல் 7.15 மணி வரை உலகம் முழுவதும் பிரகாசிக்கட்டும். இதை நமது கலாச்சாரத்துக்கு கிடைத்த வெற்றியாக...
உலகில் எந்த நாட்டிலிருந்தாலும் பிப்ரவரி 18 மாலை 7 மணி கொண்டாட்டதை மறவாதீர்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு தடையை நீக்கியதை அடுத்து, அந்த சந்தோசத்தை வெற்றி விழாவாக மாணவர்கள், இளைஞர்களுடன் கொண்டாட எல்லோருக்கும் ஆசை தான்.
அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிகட்டை நேரில் பார்க்க ஊர் மக்களின் அழைப்பை ஏற்று, மெரினாவில் கூடிய மாணவர்கள் இளைஞர்கள் 300 பேருடன் செல்வதாக முடிவு செய்தோம்.
பல வருடங்களுக்கு பிறகு நடக்கும் திருவிழா என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நாங்களே 40 பேராக குறைத்துக் கொண்டு அலங்காநல்லூர் சென்றோம்.
அலங்காநல்லூரில் இடப் பற்றாக்குறை காரணமாக என்னை மட்டும் அனுமதித்தனர் மற்றவர்களை பிறகு அனுப்புகிறோம் என்று கூறியவர்கள் அனுமதிக்கவில்லை. இதற்கு ஊர் மக்கள் மீது எந்த தவறும் இல்லை. ஊர்மக்களின் அளவு கடந்த அன்பிற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.
இம்மாபெரும் ஜல்லிகட்டு நிகழ்ச்சியை காண முடியவில்லை என்று பல மாணவர்களும் இளைஞர்களும் வருத்தப்பட்டார்கள். கண்கலங்கியும் விட்டார்கள். அதனால் நானும் அவர்களுடன் இணைந்து அங்கிருந்து சென்று விட்டேன்.
மாணவர்களும், இளைஞர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர்களது வருத்தத்தை போக்க இச்ஜல்லிகட்டு வெற்றியை வரும் பிப்ரவரி 18-ம் நாள் அன்று கொண்டாடலாம் என்று கூறினேன் அவர்களும் சம்மதித்தனர். அப்போது அவர்கள் முகம் மெரினாவில் எழுந்த அலைபேசியின் வெளிச் சத்தைபோல் ஒளிர்ந்தது.
அதனால் இத்திருநாளை வெற்றி விழாவாக எல்லோரும் இணைந்து கொண்டாடுவோம் என நாம் முடிவெடுப்போம்.
நமது சந்தோசக்களம் மெரினாதான் என்றாலும் இன்றைய சூழலில் மெரினா சரியான இடமாக இருக்காது என்பதாலும் மாணவர்கள், இளைஞர்களுடன் கேக் வெட்டி ஏதாவது ஒரு இடத்தில் ஒன்று கூடி கொண்டாட உள்ளோம்.
மற்ற அனைவரையும் இணைப்பது என்பது சிரமம் என்பதால் உலகத்தமிழர்கள் அனைவரும் இருந்த இடத்திலேயே கொண்டாடுங்கள்.
கூலித் தொழிலாளி முதல் தகவல் தொழில்நுட்ப நண்பர்கள் என ஜல்லிகட்டுக்காக குரலெழுப்பிய அனைவரும் இதை வெற்றியாக கொண்டாடுவோம்.
நினைத்ததை சாதித்தோம், சாதித்ததை வரலாறாக மாற்ற கொண்டாடுவோம்.
வருகிற 18-ந்தேதி மாலை 7 மணி முதல் 7.15 மணி வரை யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் உலகத்தமிழர்கள் அனைவரும் மொட்டை மாடியிலோ அல்லது வீட்டிற்கு வெளியிலோ, உங்கள் அலை பேசியில் டார்ச் அடித்தோ அல்லது மெழுகுவர்த்தி ஏந்தியோ அமைதியாக கொண்டாடுவோம்.
மெரினாவில் பிரகாசித்த வெளிச்சம் மீண்டும் வரும் பிப்ரவரி 18-ஆம் நாள் அன்று மாலை 7 மணி முதல் 7.15 மணி வரை உலகம் முழுவதும் பிரகாசிக்கட்டும். இதை நமது கலாச்சாரத்துக்கு கிடைத்த வெற்றியாக...
உலகில் எந்த நாட்டிலிருந்தாலும் பிப்ரவரி 18 மாலை 7 மணி கொண்டாட்டதை மறவாதீர்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story