என் மலர்

    சினிமா

    அரவிந்த்சாமியின் வணங்காமுடியில் இரண்டு நாயகிகள்
    X

    அரவிந்த்சாமியின் வணங்காமுடியில் இரண்டு நாயகிகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அரவிந்த்சாமி நடிக்கவிருக்கும் ‘வணங்காமுடி’ படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    1997-ஆம் ஆண்டு அரவிந்த் சாமி நடிப்பில் வெளிவந்த படம் ‘புதையல்’. இப்படத்தை செல்வா என்பவர் இயக்கியிருந்தார். பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த இந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. அந்த நேரத்தில் முன்னணி கதாநாயகனாக வலம்வந்த அரவிந்த் சாமியின் மார்க்கெட் சரிவிற்கு இந்த படத்தின் தோல்வியும் ஒருகாரணமாய் அமைந்தது.

    இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க வந்திருக்கும் அரவிந்த்சாமி தற்போது மீண்டும் புதையல் படத்தின் இயக்குனர் செல்வா இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிப்பார் என்றும் கூறப்பட்டது.

    இந்நிலையில், இன்னொரு ஹீரோயினாக ‘அட்டக்கத்தி’ நந்திதாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. போலீஸ் கதையாக இருப்பதால், இப்படத்தின் நாயகனும், நாயகியும் போலீசாக நடிக்கவுள்ளார்களாம். நந்திதாவுக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது.

    ‘வணங்காமுடி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.

    Next Story
    ×