என் மலர்

    சினிமா

    மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமை: சிருஷ்டி டாங்கே
    X

    மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமை: சிருஷ்டி டாங்கே

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளதாக நடிகை சிருஷ்டி டாங்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    தமிழ் பட உலகில் வளர்ந்து வரும் நாயகி சிருஷ்டி டாங்கே. ‘தர்மதுரை’ படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘அச்சமின்றி’. படத்திலும் இவரது நடிப்புக்கு நல்லவரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது மோகன்லால் நடிக்கும் ‘1971- பிகைண்ட்த பார்டர்’ படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இது குறித்து சிருஷ்டி டாங்கேவிடம் கேட்ட போது...

    “நான் கடுமையாக போராடி வெற்றி பெற்றிருக்கிறேன். நான்கு படங்கள் வெற்றி பெற்று நானும் இந்த ரேசில் சேர்ந்திருக்கிறேன். ரொம்ப சந்தோ‌ஷமாக இருக்கிறது. இந்த வருடம் குறைந்தது 10 படங்களாவது எனக்கு ரிலீஸ் ஆகும் வாய்ப்பு இருக்கிறது.

    இப்போது நான் இன்னும் சந்தோ‌ஷமாக இருக்கிறேன். காரணம் மோகன்லால் நடிக்கிற படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எனக்கு பெருமை மேஜர்ரவி டைரக்‌ஷன் என்று சொன்னாலே உடம் பெல்லாம் சிலிர்க்குது.

    மோகன்லால் படதில் நடிக்க ஒப்பந்தமான உடனேயே எப்போது அவருடன் நடிப்போம் என்று துடிச்சிட்டு இருந்தேன். நடிக்க ஆரம்பித்த உடனேயே ஜாம்பாவானுடன் நடித்த பெருமை எனக்கு.

    ‘1971-பிகைண்ட் திபார்டர்’ என்ற இந்தப் படம் எனக்கு மலையாளத்தில் முதல் படம். அல்லு சிரிஷுடன் ஜோடியாக நடிக்கிறேன். ராணுவம் சம்மந்தப் பட்ட கதை இது. நான் தமிழ் பேசும் தமிழ் பெண்ணாக நடிக்கிறேன்.

    இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகிறது.

    2017- எனக்கு நம்பிக்கை கொடுக்கும் ஆண்டாக அமையும்” என்றார்.
    Next Story
    ×