என் மலர்

    சினிமா

    ரீமேக் படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் `பிரேமம் மலர் டீச்சர்
    X

    ரீமேக் படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் `பிரேமம்' மலர் டீச்சர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    `பிரேமம்' படம் மூலம் சினிமாவிற்கு வந்த சாய்பல்லவி ரீமேக் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    ‘பிரேமம்’ என்னும் மலையாளப் படத்தின் மூலம் மலர் டீச்சர் வேடத்தில் நடித்தவர் சாய் பல்லவி. மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் மிகவும் கவர்ந்தார். தமிழ்நாட்டை சேர்ந்த இவர் இப்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

    ஏற்கெனவே மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்திருந்த சாய் பல்லவி, மலையாள ரீமேக் மூலம் தமிழில் தனது முதல் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு துல்கர் சல்மான்-பார்வதி நடிப்பில் வெளியாகி மல்லுவுட்டில் நல்ல வரவேற்பை பெற்ற படம் `சார்லி'. இதன் மறுபதிப்பில் மாதவன் நடிப்பதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், இந்த படத்தில் பார்வதியின் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் `கவலை வேண்டாம்' படத்திற்கு இசையமைத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×