என் மலர்

    சினிமா

    திரையரங்குகளில் ஒரு வாரத்துக்கு 5 காட்சிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அனுமதி
    X

    திரையரங்குகளில் ஒரு வாரத்துக்கு 5 காட்சிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அனுமதி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13-ந் தேதி (இன்று), 17, 18 மற்றும் 19-ந் தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி (5-வது காட்சிகள்) நடத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13-ந் தேதி (இன்று), 17, 18 மற்றும் 19-ந் தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி (5-வது காட்சிகள்) நடத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களான 14, 15, 16 ஆகிய தேதிகளிலும் ஏற்கனவே உள்ள அரசாணையின்படி அதிகப்படியாக ஒரு காட்சி காலை 9 மணிக்கு நடத்திக்கொள்ளலாம்.

    அதுபோல் நடமாடும் திரையரங்குகள் 14, 15, 16 ஆகிய தேதிகளில் காலைக்காட்சி 9 மணிக்கும், 13, 17, 18 மற்றும் 19-ந் தேதிகளில் ‘மேட்னி’ காட்சியாக மதியம் 2.30 மணிக்கும் நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×