என் மலர்

    சினிமா

    3 வருடங்களுக்கு பிறகு அமீருடன் மீண்டும் இணையும் யுவன்
    X

    3 வருடங்களுக்கு பிறகு அமீருடன் மீண்டும் இணையும் யுவன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    3 வருடங்களுக்கு பிறகு அமீர் இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் நாளை வெளியாக உள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    தமிழ் சினிமாவில் எதார்த்தமான படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனிஇடத்தை பிடித்துள்ளவர் இயக்குநர் அமீர்.  திரைக்கதையின் மூலம் ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் அமீரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.  `சேது`, `மௌனம் பேசியதே`, `பருத்திவீரன்`, `ஆதி பகவன்` உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அமீர், ஒருசில படங்களில்  நடித்துள்ளார்.

    இந்நிலையில், 3 வருடங்களுக்கு பிறகு அமீர், ஆர்யாவை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.  அமீர்-ஆர்யா முதன்முறையாக இணையவுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப்படம் குறித்த  அதிகாரப்பூர்வ தகவல் நாளை வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    `மஞ்சப்பை` இயக்குநர் ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள `கடம்பன்` படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. `கடம்பன்`  படத்திற்கு பின்னர் ஆர்யா, அமீருடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×