என் மலர்

    சினிமா

    தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மாற்றத்தை கொண்டு வர உழைப்போம்: குஷ்பு
    X

    தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மாற்றத்தை கொண்டு வர உழைப்போம்: குஷ்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மாற்றத்தை கொண்டு வர கடினமாகவும் நேர்மையாகவும் உழைப்போம் என்று நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
    பிப்ரவரி 5-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். விஷால் அணி சார்பில் அவர் நிறுத்தப்பட்டு இருக்கிறார். டைரக்டர் டி.ராஜேந்தர், ராதாகிருஷ்ணன், டைரக்டர் திருமலை ஆகியோரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

    தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்பட்டு இருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    “விஷால் அணியினர் என் மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற பெரிய பொறுப்புக்கு போட்டியிட நிறுத்தி உள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விஷால் மற்றும் அவரது அணியினர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடன் சேர்ந்து சிறப்பாக பணியாற்ற இருப்பதில் மகிழ்ச்சி.

    நாங்கள் வித்தியாசத்தை ஏற்படுத்துவோம். வாழ்க்கை என்பது எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவது. மாற்றத்தை கொண்டு வர கடினமாகவும் நேர்மையாகவும் உழைப்போம்.”

    இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.
    Next Story
    ×