என் மலர்

    சினிமா

    பட அதிபர் மதனின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை
    X

    பட அதிபர் மதனின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரூ.84 கோடி மோசடி வழக்கில் படஅதிபர் மதனின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    ரூ.84 கோடி மோசடி புகாரில் தலைமறைவாக இருந்த பட அதிபர் மதனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 21-ந் தேதி கைது செய்தனர். திருப்பூரில் தனது தோழி வர்ஷா வீட்டில் பதுங்கியிருந்த போது அவர் சிக்கினார்.

    கைது செய்யப்பட்ட மதன் சென்னை கொண்டு வரப்பட்டு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து மதனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

    பட அதிபர் மதன் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துவதற்காக, ராதாகிருஷ்ணனுக்கு உதவியாக கூடுதல் துணை கமிஷனர்கள் பாலசுப்பிரமணியம், அசோக்குமார் ஆகியோரை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நியமித்தார். அவர்கள் இருவரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    மோசடி பணத்தை மதன் என்ன செய்தார்? எங்கு முதலீடு செய்தார்? என்பது குறித்து அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி பணம் யார், யாருக்கு கொடுக்கப்பட்டது என்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டு வருகிறார்கள்.

    மேலும் சினிமாவில் முதலீடு செய்ததில் ரூ.50 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மதன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். வேந்தர் மூவிஸ் சார்பில் மதன் 7 சினிமா படங்களை தயாரித்துள்ளார். 10 படங்களுக்கு வினியோகஸ்தராகவும் செயல்பட்டுள்ளார். சினிமாவில் அவரது முதலீடுகள் பற்றி அவரது சினிமா உலக நண்பர்களிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.

    அதனடிப்படையில் மதனின் நண்பரும், சினிமா தயாரிப்பாளருமான சிவா மற்றும் பாலகுரு ஆகியோரை போலீசார் நேற்று விசாரணைக்கு அழைத்தனர். அதனடிப்படையில் அவர்கள் இருவரும் நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் முன்னிலையில் ஆஜரானார்கள்.

    மதனின் சினிமா முதலீடு பற்றி அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் சினிமா பிரமுகர்கள் சிலரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×